ரெண்டு குதிரையில் சவாரி செய்யும் கமல்.. இதெல்லாம் ஆண்டவருக்கு ஜுஜுபி

Kamalhaasan : இந்த வயதிலும் அதே சுறுசுறுப்புடன் உலக நாயகன் தமிழ் திரையுலகை கலக்கிக்கொண்டுதான் இருக்கிறார். இருந்தாலும் உலகநாயகன் அவர்களுக்கு கடைசியாக வந்த இரண்டு படமும் தோல்வியை தழுவியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாததால் அடுத்தடுத்து தேர்வு செய்யும் கதைகளை நிதானத்துடன் தேர்வு செய்து வருகிறார்.

தக் லைப் படம் வெளியாவதற்கு முன் பிரபலமாக பேசப்பட்டு அனைவருக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் வெளிவந்த பிறகு மண்ணை கவ்வியதை உலக நாயகன் அவர்கள ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவும் இந்த படத்தில் நடித்த பேர்போன நடிகர்கள், நடிகைகள் ஏராளம். இதில் நடித்த அனைவருக்குமே இந்த படம் ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது.

இதற்க்கு முன் வெளிவந்த இந்தியன்-2 படமும் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் வெளிவந்த பிறகு மக்கள் இந்தியன்-2 படத்தை பெரிதாக கொண்டாடவில்லை. அதனால் மனம் நொந்திருந்த கமல்ஹாசன் முழுமூச்சாக தக் லைப் படத்தில் ஆர்வம் காட்டி வந்தார். இதுவும் தோல்வியில் முடிந்தது.

தற்போது கமல்ஹாசன் அன்பறிவு இயக்கத்தில் KH237 பட வேலைகளில் பிசியாக இருந்து வருகிறார். இவ்வாறு இந்த படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கபோகிறது என அறிவுப்பு வெளியாகி உள்ளது. இதனை அடுத்து டைரக்டர் அருண்குமார் இயக்கத்தில் உலக நாயகன் அவர்கள் நடிக்க இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

அடுத்த கூட்டணி ஆண்டவருக்கு கைக்கொடுக்குமா..

டைரக்டர் அருண்குமார் ராஜ் கமல் பிலிம்ஸ் சேர்ந்து படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு நடிகர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. மேலும் இந்த பட இயக்குனர் வீர தீர சூரன், சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், சித்தா போன்ற படங்களை இயக்கி ஹிட் கொடுத்தவர்தான்.

இயக்குனர் அருண்குமார் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். அதனால் இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை குறுகிய கால இடைவெளியியல் படமாக்கப்பட்டு வெளியிட வேண்டும் எனவும் உலகநாயகன் கூறியுள்ளாராம்.

அடுத்த வருடம் தொடக்கத்திலேயே இந்த படம் வெளியாக வேண்டும் என்று கூறியுள்ளாராம். அப்படியென்றால் ஆண்டவர் ஒரே நேரத்தில் இரண்டு பட வேலைகளையும் சேர்த்து செய்தாக வேண்டும் என பேசப்பட்டு வருகிறது.