தமிழில் இந்த 2 சிங்கங்களை வைத்து இயக்க ஆசைப்படும் ராஜமௌலி.. படம் வந்தா தியேட்டர் இருக்காது

இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி தனது பாகுபலி படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியை அடைந்தார். இதைத்தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர் என இந்த இரண்டு நடிகர்களையும் இணைந்து ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இப்படம் வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் ராஜமௌலி தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கி வந்த நிலையில் தற்போது தமிழ் நடிகர்களின் படங்களை இயக்க ஆர்வமாக உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க திட்டம் வைத்துள்ளதாக கூறி இருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து பல வருடங்கள் ஆகிறது. ஆனால் பல இயக்குனர்களும் இந்த முயற்சியில் ஈடுபட்டாலும் யாருக்கும் அது கைகூடவில்லை.

ஆனால் ஆரம்பத்தில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். ரஜினி, கமல் இருவரும் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், தப்புத்தாளங்கள், அவள் அப்படித்தான், அலாவுதீனும் அற்புத விளக்கும், நினைத்தாலே இனிக்கும், தாயில்லாமல் நானில்லை போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர்

ஆனால் அதில் பெரும்பாலான படங்களில் கமல் ஹீரோவாகவும், ரஜினி வில்லனாகவும் நடித்து இருப்பார். ஆனால் ராஜமவுலியின் கதையில் கமலஹாசன் வில்லனாகவும், ரஜினிகாந்த் ஹீரோவாகவும் இயக்க ஆசையாக உள்ளேன் என ராஜமௌலி கூறியுள்ளார்.

இந்த செய்தியை கேட்ட சினிமா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் இப்படம் உருவானால் தமிழ் சினிமாவில் இப்படம் ஒரு மைல்கல்லாக இருக்கும். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் ஆன கமல் மற்றும் ரஜினி ஒரே திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →