Srikanth: கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை கேள்விப்பட்டிருப்போம். அதுதான் இப்போது ஸ்ரீகாந்த் வழக்கில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு மதுபான கடை பார் அருகில் நின்று கொண்டிருந்தவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்து அதன் பின்னால் நடந்த மிகப்பெரிய சம்பவம் தான் ஸ்ரீகாந்த் கைது.
தற்போது ஸ்ரீகாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவரிடம் விசாரணை நடத்தியதில் தமிழ் சினிமாவை சேர்ந்த டாப் 10 நடிகர்களின் பெயர்கள் வெளியாகி இருப்பதாக தெரிகிறது.
சிக்கும் டாப் 10 நடிகர்கள்
மேலும் ஏற்கனவே அவர் நடிகர் கிருஷ்ணாவை கைகாட்டி இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கிருஷ்ணாவை பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகளும் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில்தான் திடுக்கிடும் தகவலாக பத்து டாப் நடிகர்களின் பெயர்கள் இந்த வழக்கில் வருகிறது. அதிலும் முக்கியமான மூன்று எழுத்து நடிகர் ஒருவர் அவர் நடத்தும் எல்லாவித கொண்டாட்ட நிகழ்விலும் போ..தை பொருளை சப்ளை செய்வாராம்.
அவருடன் நடித்த நடிகைகள் கூட இந்த போ..தைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். மேலும் இளம் இசையமைப்பாளர் ஒருவரின் பெயரும் இதில் வெளியாகி இருக்கிறது.
அந்த இசையமைப்பாளருக்கு இந்த மருந்து உள்ளே போனால் தான் இசைஞானமே வருமாம். அந்த அளவுக்கு அடிமையாகி இருக்கிறாராம்.
சில வருடங்களுக்கு முன்பு இந்த மாதிரி போ..தை வழக்கில் கர்நாடகாவை சேர்ந்த பல முக்கிய நடிகர்கள் சிக்கினார்கள். அப்படி ஒரு விஷயம் தான் தற்போது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது.