ஈகோ தலைக்கேறி ஆணவத்துடன் திரியும் விராட் கோலி.. உலகக் கோப்பை தோல்விக்கு போடும் அஸ்திவாரம்

Eggoist Virat kholi: நடப்பு உலக கோப்பையில் ஜோராக இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணியில் ஒருவரை தவிர மற்ற அனைவரும் 100 சதவீத பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள்.

விராட் கோலி தனக்கு ஒரு விஷயம் வரவில்லை என்றால், அதைக் மற்றவர் சொல்லும் அறிவுரையை கேட்டு நடக்கும் மணப்பக்குவமற்றவராக விளையாடி வருகிறார். இந்த உலகக்கோப்பையில் அவர் எடுத்திருக்கும் முடிவு தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்து வருகிறது.

ரன் மிஷின், அதாவது ரண்களை குவிக்க கூடிய மிஷின் போல் விளையாடுபவர் விராட் கோலி. ஆனால் இந்த உலகக் கோப்பையில் 6 போட்டியில் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். முக்கியமான போட்டிகளில் எல்லாம் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியுள்ளார்.

உலகக் கோப்பை தோல்விக்கு போடும் அஸ்திவாரம்

இந்தத் தொடர் எல்லா போட்டிகளிலும் விராட் கோலி ரோஹித் சர்மா உடன் ஓப்பனிங் இறங்கியுள்ளார். எப்பொழுதும் அவர் ஒன் டவுன் தான் இறங்குவார். ஆனால் இது அவருக்கு செட்டாகவில்லை என்று தெரிந்தும், மற்றவர்கள் அறிவுரை கூறியும் எதையும் கேட்க மறுக்கிறார்.

ஆணவத்தின் உச்சத்துக்கே சென்று நான் இந்த இடத்தில் தான் இறங்குவேன் என்று யார் சொல்லியும் கேட்காமல் இறங்கி வருகிறார். இது அவருக்கு பாதகமாகத்தான் முடிகிறது. 6 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆகியுள்ளார். அடுத்து நடக்கவிருக்கும் அரையிறுதி போட்டிகளிலும் இப்படி இறங்கினால் நிச்சயமாக இந்திய அணிக்கு பாதகமாக தான் முடியும்.

Next Story

- Advertisement -