சிம்புவை தொடர்ந்து.. பா ரஞ்சித் செய்த மிகப்பெரிய உதவி

Director : தமிழ் சினிமா உலகில் முன்னிலை இயக்குனராக திகழ்ந்து வருபவர் பா ரஞ்சித். இவர் இயக்கும் படத்தின் சூட்டிங் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்தது மிகப் பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு பா ரஞ்சித் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?

நடந்தது என்ன..?

திரைப்படம் : ஆர்யாவை ஹீரோவாக வைத்து வெட்டுவம் திரைப்படத்தின் ஷூட்டிங் நாகப்பட்டினத்தில் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அந்த ஷூட்டிங்கில் நடந்த சோகமான விஷயம் சினிமா வட்டாரத்தையை அச்சமாக்கியுள்ளது.

ஒரு கார ஏரியோடு கொண்ட பாலத்தில் இருந்து கீழே தள்ளும் பயங்கரமான ஒரு சீன். கார் திடீரென கட்டுப்பாட்டை இருந்ததால் ஸ்டன் மாஸ்டர் மோகன்ராஜ் காருடன் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் துயரத்தில் ஆழ்த்தியது. அப்படி உயிரை வைத்து தான் இந்த ஸ்டண்ட் காட்சியை எடுக்க வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஸ்டண்ட் மாஸ்டர் மோகன் ராஜுக்கு நடந்த இந்த துயர சம்பவத்தை கேட்டு மன வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இதையடுத்து மோகன் ராஜின் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் உதவி செய்வேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். கல்வி செலவையும் சேர்த்து செய்வேன் என்று கூறியுள்ளார்.

பா ரஞ்சித்தின் முடிவு..

மீண்டும் வெட்டுவம் திரைப்படத்தின் சூட்டிங் தொடர்ந்துள்ள பா ரஞ்சித் தற்போது 20 லட்சம் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு கொடுப்பதாக கூறியுள்ளார். முதலாவதாக சிம்பு உதவி செய்தார். அதனை தொடர்ந்து, அந்தத் திரைப்படத்தின் இயக்குனரான பா. ரஞ்சித் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 20 லட்சம் கொடுத்து உதவி செய்ய இருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →