Gossip News: புடிச்சாலும் புளியங்கொம்ப புடிச்சிட்டான் என்று எல்லோரும் ஆதங்கப்படும் அளவிற்கு இந்த இயக்குனருக்கு காதலி இருக்கிறார். காதலிக்காக ஒரு கட்டத்தில் சினிமாவின் மீது கவனம் இல்லாமல், அவர் பின்னாடியே சுற்றுவதை மட்டுமே வேலையா வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஒரு பெரிய நடிகரை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கிடைத்தது.
எத்தனை நாளைக்குத்தான் இந்த காதலன் பதவியோடு சுற்றுவது என்று நினைத்த இயக்குனர் காதலியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று அவ்வப்போது கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் காதலிக்கு திருமண வாழ்க்கையை விட பணம் சம்பாதிப்பதில் கவனம் அதிகம் இருந்ததால் கல்யாண பேச்சை எடுத்தாலே டபாய்த்து கொண்டிருந்தார்.
இதனால் பயங்கர காண்டில் இருந்த இயக்குனர் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாகி இருந்தார். அப்போதுதான் பிரபல நடிகையின் அறிமுகம் இயக்குனருக்கு கிடைத்தது. நடிகை பார்ப்பதற்கு லட்சணமாகவும், நன்றாக பேசி பழகும் குணமுடையராகவும் இருந்ததால் இயக்குனர் சபலப்பட்டு காதலில் விழுந்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் இந்த காதல் செய்தி காட்டுத்தீயாய் சினிமா வட்டாரத்தில் பரவத் தொடங்கியதோடு, மீடியாக்களும் பட்டும் படாதது போல் ஏகத்துக்கும் செய்திகள் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இயக்குனர் தரப்பில் இருந்தோ அல்லது நடிகையின் தரப்பிலிருந்து எந்த ஒரு மறுப்பும் இந்த செய்திகளுக்கு தெரிவிக்கப்படவில்லை.
ஒரு கட்டத்தில் காதலிக்கும் இந்த செய்தி உண்மைதான் என்று தெரிந்து விட்டது. அதே நேரத்தில் இயக்குனரின் படமும் மொத்தமாய் பிளாப் ஆகி விட்டது. காதலியை விட்டால் பிச்சை தான் எடுக்க வேண்டும் என்று இயக்குனர் உஷார் ஆகிவிட்டார். அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய் ஆகிவிடக் கூடாது என்பதற்காக காதலியின் காலிலே விழுந்து சரணடைந்து விட்டார்.