அப்பட்டமாக படுத்தால் தான் வாய்ப்பு என்பது சினிமாவில் உலகம் அறிந்த விஷயம்..அந்த கால பழைய ஹீரோயின்கள் முதல் இந்த கால இளம் நடிகைகள் வரை வெளிப்படையாய் பலர் இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். பணம் ,கேளிக்கை என அவர்கள் வாழ்க்கை ஒரு உல்லாசத்தை தேடியே போகிறது.
பெரும்பாலும் திறமையை நம்பி யாரும் நடிக்க வருவதில்லை. அழகு, துணிச்சல் தான் இதற்கு அஸ்திவாரம். அப்படி வாய்ப்பு தேடி வருபவர்களை எளிதாக தங்கள் வலையில் வீழ்த்தி விடுகிறார்கள் இந்த சினிமாக்காரர்கள். சினிமாவில் ஏமாந்தவர்கள் மட்டுமல்லாமல், எட்டாத உயரத்தை பிடித்த ஹீரோயின்களும் இருக்கிறார்கள்.
முழுக்க நினைந்த பிறகு முக்காடு எதற்கு என்பது போல் ஒரு முறை அட்ஜஸ்ட்மென்ட் செய்துவிட்டால் போதும், அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகிறார்கள். இப்படி கேரளத்தில் இருந்து சினிமா வாய்ப்புக்காக 20 வயதில் வந்தவர் அந்த நடிகை. வந்தவுடனேயே பெரிய ஹீரோ படத்தில் வாய்ப்பு கதவைத் தட்டியது
ஆரம்பத்தில் சேச்சி மிகவும் பவ்யமாக இரண்டு, மூன்று படங்களில் நடித்தார். படம் சூப்பர் ஹிட் ஆகாவிட்டாலும் கேரளத்து பைங்கிளிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த இரண்டு படங்களுமே அட்ஜஸ்ட்மென்ட் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் என்பது பின்னர்தான் மொத்த கோடம்பாக்கத்திற்கும் தெரிந்தது.
ஒரு பெரிய இயக்குனரிடம் தன்னை மட்டும் இல்லாமல் சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்துள்ளார். விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை போகவே அம்மணியின் பத்தினி வேஷம் கலைந்தது. அதன் பின்னர் தான் நடிகையின் உண்மை முகம் வெளியில் தெரிந்தது.
ஆனால் நடிகையோ இயக்குனர் தனக்கு ரகசிய தாலி கட்டிவிட்டார். இது அவர் மனைவிக்கும் தெரியும். நாங்கள் ஒரே வீட்டில் பல நாட்கள் விருந்து சாப்பிட்டு இருக்கிறோம். இப்பொழுது என் கணவருக்கு சூனியம் வைத்துவிட்டார் அவரது முதல் மனைவி என்று போர்க்கடித் தூக்கி வருகிறார்.