Kamal: இந்த விஷயத்தில ஆண்டவரை பாராட்டியே ஆகணும்.. ரஜினியின் 25 படங்களை இயக்கியவரை தூக்கி விட்ட கமல்

Kamal and Rajini: வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று சொல்வார்கள். அது போல தான் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் கமலின் செயல்கள் இருக்கிறது. அதாவது கமலை பொருத்தவரை வித்தியாசமான படங்களில் நடிப்பதும், பெயர் சொல்லும் அளவிற்கு அந்த படம் சிறந்து விளங்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்தக் கூடியவர்.

அப்படிப்பட்ட இவர் சினிமாவைப் பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கும் என்சைக்ளோபீடியா என்ற பெயரையும் வாங்கி விட்டார். இப்படி இவரைப் பற்றி சினிமாவில் இருக்கும் விஷயங்கள் மட்டும் தான் அனைவரும் அதிகமாக கேள்விப்பட்டிருப்போம். ஆனால் பல விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் கமுக்கமாகவே மறைந்திருக்கிறது.

அது தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் மூத்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் எஸ்பி முத்துராமன் கிட்டத்தட்ட 72 படங்களுக்கும் மேல் இயக்கி இருக்கிறார். முக்கியமாக ஆர் முத்துராமன், ஜெய்சங்கர், சிவாஜி, ரஜினி மற்றும் கமல் ஆகியோர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார்.

கமல் பற்றி உணர்ச்சிபூர்வமாக பேசிய இயக்குனர்

ரஜினிக்கு மட்டும் கிட்டத்தட்ட 25 படங்களுடன் கைகோர்த்து இயக்கிய பெருமை இவரையே சாரும். அப்படி ரஜினியை தூக்கி விட்ட இயக்குனர் எஸ்பி முத்துராமனுக்கு கை கொடுத்து தூக்கி விட்டது கமல். அதாவது கமல் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த பேர் சொல்லும் பிள்ளை படத்தை இயக்கியது எஸ்பி முத்துராமன்.

இப்படம் எஸ்பி முத்துராமன் கமலிடம் கேட்டுக் கொண்டதற்காக இவருடைய யூனிட்டுக்காக கமல் நடிக்க ஒத்துக்கொண்ட படம் என்றே சொல்லலாம். அதனால் இப்படம் வெற்றியடைந்ததை ஒட்டி இதன் மூலம் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியை கமல் இவர்களுக்காக ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.

ஆனால் அதே நேரத்தில் தான் ரஜினியை வைத்து வேலைக்காரன், மனிதன், குரு சிஷ்யன், மிஸ்டர் பாரத் போன்ற வெற்றி படங்களை எஸ்பி முத்துராமன் ரஜினிக்கு வெற்றியாக கொடுத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ரஜினி இவரை கண்டு கொள்ளாமல் போன நிலைமையில் கமல் ஒத்த படத்தின் மூலம் வந்த லாபத்தில் ஒரு பகுதியை எஸ்பி முத்துராமனுக்கு கொடுத்திருக்கிறார். இது உண்மையிலேயே பாராட்டக்கூடிய விஷயமாகத்தான் பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் எஸ்பி முத்துராமன் அளித்த பேட்டியில் கமல் எங்களுடைய யூனிட்டுக்காக நடித்துக் கொடுத்த படம் தான் பேர் சொல்லும் பிள்ளை. அப்பொழுது அவர் கொடுத்த லாபத்தின் ஒரு பகுதி தான் இப்பொழுது வரை எங்களுடைய வாழ்க்கைக்கு அஸ்திவாரமாகவே இருக்கிறது என்று உணர்வுபூர்வமாக பேசி கமலை பாராட்டிருக்கிறார்.

Next Story

- Advertisement -