வெள்ளிக்கிழமை, மார்ச் 14, 2025

இரண்டாம் பாகம் ஹீரோவாகவே மாறிய கார்த்தி.. செமத்தியா மெய்யழகன் கைவசம் இருக்கும் 4 லைன்அப்

2022 சர்தார் படத்திற்கு பிறகு கார்த்திக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஓடவில்லை. ஜப்பான், மெய்யழகன் என வரிசையாக படங்களை நடித்து தள்ளினாலும் பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு இவர் நடிப்பில் எந்த படமும் ஹிட் ஆகவில்லை.

பொன்னியின் செல்வன் படம் கூட இவர் சோலோவாக நடிக்கவில்லை. இப்பொழுது வா வாத்தியாரே படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் கூடிய விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்கு அப்புறம் ஏற்கனவே இவர் நடித்த சூப்பர் ஹிட் நான்கு படங்களின் இரண்டாம் பாகத்தை குறி வைத்துள்ளார்.

சர்தார் 2: இந்த படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது. சென்னையில் பிரசாத் லேபில் செட் அமைத்து சூட்டிங் எடுத்து வருகின்றனர். இந்த படம் சைனாவில் நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

கைதி 2: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி படம் நீண்ட நாட்களாகவே இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற எதிர்பார்ப்போடு காத்துக் கிடக்கிறது. கூலி படத்தை முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை தான் எடுக்க திட்டம் போட்டு வருகிறார்.

தீரன் அதிகாரம் ஒன்று: உண்மை கதையை தழுவி ஹச் வினோத் எடுத்த படம் இது. மக்களிடையே செம வரவேற்பை பெற்ற இந்த படமும் கூடிய விரைவில் இரண்டாம் பாகம் ரெடியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் பாதி ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிவிட்டார் வினோத்.

இயக்குனர் தமிழ்: டானாகாரன் படத்தை இயக்கியவர் தமிழ். இப்பொழுது இவர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்கவியிருக்கிறார். இந்த படமும் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. இந்த படம் அடுத்த மாத இறுதியில் சூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறார்கள். மொத்தத்தில் கார்த்தி 4 இரண்டாம் பாகம் படங்களில் நடிக்க உள்ளார்.

Trending News