சன் டிவி குழுமத்தில் முற்றிய பிரச்சினை.. தயாநிதியுடன் மோதும் கலாநிதி மாறன்

அண்ணன் தம்பிகளிடையே எழுந்து வந்த சிறுசிறு பிரச்சினை தற்போது வீதிக்கு வந்துள்ளது. முரசொலி மாறன் குடும்பத்தை பற்றி அதாவது சன் குடும்பத்தை பற்றி தெரியாதவர்கள் இருந்திருக்க முடியாது. பெரிய அரசியல் பின்னணியிலிருந்து வந்த முரசொலிமாறனின் மகன்கள் தான் தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன்.

இவர்கள் இணைந்து சன் குழுமத்தை நடத்தி வந்தார்கள் பிறகு சிறு சிறு பிரச்சினை மற்றும் அரசியல்ரீதியான காரணங்களால் இரண்டு பேரும் பிரிந்து அவர்களுது வேலைகளை செய்து வந்தார்கள். தற்போது தயாநிதி மாறன் தன் சகோதரரான கலாநிதி மாறனின் மீது லீகல் நோட்டீஸ் அனுப்பியிருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதுவும் இது இரண்டாவது நோட்டீஸ் என்பது அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியிருக்கிறது. அதாவது 2003ம் ஆண்டு எஸ்டாபிளிஷ்மென்ட் Act பிரகாரம் உள்ள விதிகளை கலாநிதிமாறன் பின்பற்றவில்லை என நோட்டீஸ் விடப்பட்டிருக்கிறது. இந்த நோட்டீஸ் ஆனது வக்கீல் சுரேஷ் என்பவர் மூலம் ஜூன் 10ம் தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே முற்றிய பிரச்சினை

இதில் சன் டிவி ஏமாற்றுதல், சட்ட விரோதமான பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது இரண்டாவது நோட்டீஸ் என மனி கண்ட்ரோல் டாட் காம் தெரிவித்துள்ளது. இரண்டாவது நோட்டீஸ் என்பதால் இது இன்றைக்கு அல்ல ஏற்கனவே பிரச்சினை நடந்து கொண்டிருக்கிறது என தெரிகிறது.

தயாநிதி மாறன் முன்னாள் மத்திய அமைச்சராக தகவல் தொழில்நுட்ப துறையில் இருந்து வந்தவர். தற்போது மத்திய சென்னை திமுக MP-ஆக இருக்கிறார். இவர் அரசியலில் பிசியாக இருந்து வந்ததால் இந்த பிரச்சினையில் நேரடியாக தலையிடாமல் இருந்து வந்துள்ளார். தற்போது ஷேர்ஸ் தொடர்பாக பிரச்சினை எழ ஆரம்பித்துள்ளது என தெரியவந்துள்ளது.

இந்த நோட்டீஸில் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், ரவி ராமலிங்கம், நடராஜன், சிவ சுப்பிரமணியன் மற்றும் ஸ்ரீதர் ஸ்வாமிநாதன் ஆகியவர்கள் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வரக்கூடிய நாட்களில் கலாநிதிமாறன் இதை எப்படி எதிர்கொண்டு சமாளிக்க போகிறார். என்ன மாதிரியான எதிர்வினைகளை கொடுக்க போகிறார் என பார்க்கலாம்.