தமிழ் மொழியிலிருந்து தான் கன்னடம் பிறந்தது என்று கமல் கூறி இருப்பது பெரும் சர்ச்சை கிளப்பி உள்ளது. இதனால் கர்நாடகாவில் Thuglife படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று மறுத்து வழக்கு போட்டுள்ளனர். இதற்கான தீர்ப்பு இன்று 2.30 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட உள்ளது.
கன்னட மொழி தமிழில் இருந்து தான் பிறந்தது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? அப்படி கூறுவதற்கு நீங்கள் என்ன மொழி ஆய்வாளர்களா? என்பது போன்ற கேள்வியை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கேட்டுள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நீதிபதி கூறுகையில் கமல் மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் கமல் தரப்பில் இருந்து மன்னிப்பு கேட்க முடியாது தெனாவட்டாக தெரிவித்துள்ளார். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது.
உலக மொழிகளிலே பழையான மொழி தமிழ் மொழின்னு நம்ம பாரத பிரதமர் மோடியே பெருமையா சொல்லியிருக்கார், விட்டா அவர் மேலேயும் கேஸ் போடுவீங்க போல. இந்த பதற்றம் எல்லாம் படம் ரிலீஸ் ஆனதும் சரியாப்போகும்.
சும்மா சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் மொழியை வச்சி ஒரு கூட்டம் அரசியல் பண்ணிட்டு இருக்கிறது. அந்த கூட்டத்தை தலையில தட்டி உட்கார வச்சா எல்லாம் சரியாப்போகும் என்பது போன்ற தெளிவான முடிவில் இருக்கிறார் கமல்.
ஒருவேளை கர்நாடகாவில் Thuglife படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் கமல் தயாரிப்பில் வெளிவர உள்ள இந்த படத்திற்கு மட்டும் 10 கோடி நஷ்டம் ஏற்படுமாம். அதையும் பொருட் படுத்தாத கமல் கர்நாடகா மக்கள் தமிழ் மொழியோடு இணைந்து தான் உள்ளனர், இதில் எந்த ஒரு தவறும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டார்.
மற்றொருபுறம் இது படத்திற்கான சுய விளம்பரம் என்றும் விரைவில் கமல் மன்னிப்பு கேட்டு விடுவார் என்கின்றனர். மன்னிப்பு கேட்டு விட்டால் அவர் கூறியது பொய்யாகிவிடும் உலக நாயகன் எதையும் அறியாமல் புரியாமல் பேசும் நபர் அல்ல என்பதற்கு இதுவே சான்று.