ராணியாக ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராய்.. வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்த போஸ்டர்

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். ஏஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரலாற்று காவியமான இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இந்த திரைப்படம் உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கேரக்டர்கள் குறித்த போஸ்டரை பட குழு தற்போது அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே பொன்னியின் செல்வன் சோசியல் மீடியாவை கலக்கி வருகிறது.

அதிலும் சமீபத்தில் வெளியான விக்ரம் மற்றும் கார்த்தியின் ஆதித்ய கரிகாலன், வந்தியத்தேவன் போஸ்டர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. அதைத்தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ராயின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியாகி இணையதளத்தை கலக்கி வருகிறது.

தற்போது லைகா நிறுவனம் அந்த போஸ்டரை வெளியிட்டு பழிவாங்கும் முகம் அழகானது, பழுவூர் ராணி நந்தினியை சந்திக்கவும் என்று ட்வீட் செய்துள்ளது. அதில் ஐஸ்வர்யா ராய் பழுவூர் ராணியாக அழகில் ஜொலிக்கிறார். இந்த போட்டோ தற்போது ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.

மேலும் அதில் குறிப்பிட்டுள்ளபடி ஐஸ்வர்யா ராய் அழகில் ஜொலித்தாலும், அவர் முகத்தில் பழிவாங்கும் உணர்வு இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதன் மூலம் இந்த திரைப்படத்தில் அவருக்கு மிகவும் வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அந்த வகையில் ரசிகர்கள் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை காணும் ஆவலில் இருக்கின்றனர். இன்னும் இது போன்ற அடுத்தடுத்த கதாபாத்திரங்களின் போஸ்டர்களையும் பட குழு வெளியிட இருக்கிறது.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →