Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இரண்டு நோயினால் அவதிப்படும் ஸ்ருதிஹாசன்.. போதை பழக்கத்தினால் ஏற்பட்ட துயரம்

கமலஹாசன் சரிகா ஜோடிக்கு இரண்டு மகள்கள் அதில் சுருதிகாசன் அந்த அக்ஷராஹாசன் இருவர் இதில் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கமலஹாசன் நடவடிக்கைகள் அனைத்தும் தந்தை போன்றே ஒளி மறைவின்றி வெளிப்படையாக இருக்கும் […]

கமலஹாசன் சரிகா ஜோடிக்கு இரண்டு மகள்கள் அதில் சுருதிகாசன் அந்த அக்ஷராஹாசன் இருவர் இதில் மூத்த மகள் சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கமலஹாசன் நடவடிக்கைகள் அனைத்தும் தந்தை போன்றே ஒளி மறைவின்றி வெளிப்படையாக இருக்கும்

தெலுங்கு சினிமாவில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கும் பொழுது அவரை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன். திருமணம் செய்யாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். பின்பு அவரைவிட்டு பிரிந்து லண்டனை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

தற்பொழுது இசை துறையைச் சேர்ந்த சாந்தனு என்பவரை காதலித்து வரும் சுருதிகாசன், அவருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தற்போது தந்தை கமலஹாசனுடன் சென்னையில் இல்லாமல், மும்பையில் தனியாக வசித்து வருகிறார். இவருக்கு சிறு வயதிலிருந்து போதை பழக்கம் உண்டு என்று அவரை வெளிப்படையாக கூறியுள்ளார். இதனால் குடி போதைக்கு அடிமையாக மாறினார்.

ஸ்ருதிஹாசனுக்கு தற்போது இரண்டு விதமான நோய்கள் அவரை வாட்டி வருகிறது. இதில் ஒரு நோய் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் எனப்படும் இந்த நோய் கர்ப்பப்பை புண் என்பதாகும். இந்த நோயின் காரணமாக குழந்தையை சுமக்கும் சக்தி ஸ்ருதிஹாசனுக்கு இல்லை என்று கூறப்படுகிறது. அதே போன்று பாலியல் தொடர்பான மற்றொரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் ஹார்மோன் கோளாறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீவிர சிகிச்சை மேற்கொண்டும் மருந்து மாத்திரை உட்கொண்டும் இந்த நோயினை உடற்பயிற்சியின் மூலம் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவலை அவரே வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.