இறப்பிற்கு முன் மோசமான உறவு செய்த வார்னே.. 4 பேரை துண்டா தூக்கிய போலீஸ்

ஆஸ்திரேலிய நாடே கதறிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் மரணம் இயற்கையானதான ஒன்றா, இல்லை வேறு ஏதும் குற்றப்பின்னணி இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வார்னே ஒரு ஜாலி பேர்வழி. மது, மாது என எல்லா பழக்கங்களையும் அனுபவித்து வாழ்பவர். இந்நிலையில் அவர் இன்பச் சுற்றுலாவுக்காக தாய்லாந்து சென்றிருக்கிறார் .

தாய்லாந்தில் உள்ள அவரது விடுதியில் கடந்த மார்ச் 4ஆம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் பேச்சு மூச்சின்றி மயங்கிய நிலையில் கிடந்ததாகவும், எவ்வளவு போராடியும் வார்னேவை காப்பாற்ற முடியவில்லை என்றும் அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதும் போலீசார் வார்னேவின் மரணம் இயற்கையானதான ஒன்று தான். அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சுயநினைவை இழந்து, இறந்து கிடந்துள்ளார் என்று அறிக்கையை வெளியிட்டது போலீசார் தரப்பு.

Warnae
Warnae

ஆனால் வார்னேவின் விடுதியில் நான்கு பெண்கள் வருவதும், அவர்கள் பதட்டத்துடன் திரும்பி செல்வதும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. வார்னே அந்த 4 பெண்களுடன் நிர்வாண மசாஜ் செய்தும், உல்லாசமாகவும் இருந்துள்ளார்.

வார்னே அவர்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கலாம், அதனால் பயத்தில் அந்த 4 பெண்களும் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கலாம் என்று விடுதியில் உள்ள பணியாளர்கள் கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி ஷேன் வார்னேவின் நண்பர் போலீசாரிடம் அந்த 4 பெண்களைப் பற்றிய உண்மையை மறைத்து விட்டார். இப்பொழுது போலீசார் தீவிரமாக அந்த நான்கு பெண்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →