வாரிசு நடிகையை மொத்தமாக கழட்டிவிட்ட தமிழ் சினிமா.. ஹாலிவுட்டில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

உலகநாயகன் கமலின் மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்து வந்தார். அந்த பாடல்களும் வெற்றியடைந்தன பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் நடித்தார். பின்னர் உச்ச நட்சத்திரங்கள் அனைத்தும் நடிகர்களுடன் நடித்தார். ஆனால் அவர் மற்றும் மொழிகள் மீது உள்ள ஈர்ப்பினால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடிக்க தொடங்கினார்.

அதனால் ஸ்ருதிஹாசன் தமிழில் மீது உள்ள ஆர்வம் குறைந்தது. அவர் இஷ்டத்திற்கு தமிழ்நாட்டில் வாழ முடியாததால் அவர் பிடித்த இடத்தில் தனியாக இருந்து வருகிறார். கமலைப் போல அதிக திறமைகளை கொண்டிருந்தாலும் சில காதல் பிரச்சினைகளில் மற்றும் படங்களில் கவர்ச்சி காட்டினாலும் இவர் பெயர் தவறாக சித்தரிக்கப் பட்டது.

இப்போது தமிழ் சினிமாவில் இவரைப் பற்றிய பேச்சு அடிபடுகிறது ஸ்ருதிஹாசன் எங்கே இருக்கிறார்.அவரைப் பற்றி பேச்சுக்கள் இல்லை எந்த பாடல்களும் பாடுவதில்லை நடிப்பதும் இல்லை என்ன செய்கிறார் என்ற கேள்வி எழுகிறது.ஆனால் ஸ்ருதிஹாசன் தற்போது மற்ற மொழிகளை தாண்டி ஹாலிவுட் பக்கம் சென்றிருக்கிறார். டாப் நேஸ் மான் என்ற பெண் இயக்குனர் இயக்கும் ‘தே ஐ’ படத்தில் இணைகிறார். இதனால் அவர் மற்ற மொழிகளில் இருந்து ஹாலிவுட்டில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவர் சித்தார்த் மற்றும் வேறு நடிகர்கள் என லிவிங் டு கெதர் வாழ்ந்து வந்தார். கடைசியாக வேறு மாநிலத்தில் உள்ள இசையமைப்பாளரை காதலித்து அவருடன் வாழ்ந்து வந்தார். பின்னர் இவருக்கு உடல் சம்பந்தமான பல நோய்கள் வந்ததால் அதனை தைரியமாக மீடியாக்களில் கூறினார். அதனை தைரியமாக சரி செய்து இப்பொழுது ஹாலிவுட் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கிறார் என்பது பாராட்டத்தக்கது.

ஸ்ருதிஹாசன் பேசும்போது யாராக இருந்தாலும் தைரியமாக நேரடியாக பேசி விடுவார். தனக்கு சுதந்திரம் தேவை என்று கமலஹாசன் உடன் இல்லாமல் தனியாக மும்பையில் வீடு எடுத்து தங்கி அங்கே பல வாய்ப்புகளை தேடி நடித்து வந்தார். கல்யாணத்தில் எனக்கு நம்பிக்கை திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்ள எனக்கு ஆசை என்று தைரியமாக கூறினார்.

கவர்ச்சி காட்டுவதிலும் சரி தைரியமாக பேசுவதிலும் சரி யாருக்கும் கட்டுப்பட்டு நடக்க மாட்டார் ஸ்ருதிஹாசன் என்பது நன்றாக தெரியும். அதனால் தமிழ் நாட்டில் அவருக்கு நல்ல பெயர் என்று எதுவும் இல்லை. அவரும் தமிழ்நாட்டை விரும்பாமல் மற்ற மொழிப் படங்களில் நடித்தால் போதும் அதில் பெயர் எடுத்தால் போதும் என்று வாழ்ந்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →