சிங்கப்பெண்ணில் கர்ப்பத்தை வெளியில் சொல்லும் கட்டாயத்தில் ஆனந்தி.. ஒரே அணியில் சேர்ந்த வார்டன்-லலிதா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தி யாருக்கும் தெரியாமல் இத்தனை நாள் தான் கர்ப்பமாக இருப்பதை மறைத்து வைத்திருந்தாள். ஆனால் விதியின் வசம் தற்போது அவளே வாயை திறந்து சொல்லும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே மெடிக்கல் கடைக்காரர் ஹாஸ்டலில் யாரோ கர்ப்பமாக இருப்பதாக வார்டன் மனோன்மணியிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அதே நேரத்தில் ஆனந்தி வாந்தி எடுப்பதை வார்டன் பார்த்து விடுகிறார்.

ஆனந்திக்கு ஏற்பட்ட கட்டாயம்

ஆனந்தியிடம் நேரடியாக கேட்காமல் ஹாஸ்டலில் இருக்கும் அத்தனை பேரையும் ஒரு இடத்திற்கு வர வைக்கிறார்.

வார்டனின் சந்தேகம் சௌந்தர்யா பக்கம் திரும்பும் போது கண்டிப்பாக ஆனந்தி வாயை திறந்து உண்மையை சொல்லியே ஆக வேண்டும்.

அதே நேரத்தில் அன்புவின் அம்மா லலிதா துளசியின் அப்பா அம்மாவை அழைத்து அவருடைய கணவரின் ஆசைப்படி அன்புவுக்கு துளசியை திருமணம் செய்து வைக்குமாறு கேட்கிறார்.

ஒரு பக்கம் மனோன்மணி, இன்னொரு பக்கம் அன்புவின் அம்மா லலிதா என இருவரும் ஒரு அணியில் சேர்ந்து ஆனந்தியின் பிரச்சனைக்கு முடிவு கட்ட இருக்கிறார்கள்.