தீராத அன்பு-மகேஷ் பஞ்சாயத்து, திணறும் சிங்கப்பெண்ணே இயக்குனர்.. கதையில போக்கஸ் பண்ணுங்க ஜி!

Singapenne: சிங்க பெண்ணே சீரியல் கடந்த சில மாதங்களாக ரசிகர்களிடையே பெரிய அதிருப்தியை சம்பாதிக்கிறது. இதற்கு காரணம் கதையின் போக்கில் எந்த சுவாரசியமும் இல்லாமல் ஒரே விஷயத்தை இழுத்தடிப்பது தான்.

நல்லா போய்கிட்டு இருந்த கதையை எதற்காக இயக்குனர் இப்படி செய்கிறார் என நேயர்களுக்கு வருத்தம் இருந்தது. உண்மையிலேயே அதன் பின்னால் பெரிய பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருப்பது தான் இதற்கு காரணம்.

அன்பு-மகேஷ் பஞ்சாயத்து

எல்லா சீரியலையும் பொறுத்த வரைக்கும் இவர்தான் ஹீரோ, இவர் தான் வில்லன் என முன்பே தெரிந்து விடும். அந்த ஹீரோவுடன் ஹீரோயின் சேர வேண்டும் என நேயர்கள் விரும்புவார்கள். ஆனால் சிங்க பெண்ணே சீரியலை பொருத்தமட்டிலும் அன்பு மற்றும் மகேஷ் இருவருக்குமே அதிக வரவேற்பு இருக்கிறது.

இந்த சீரியல் ப்ரோமோ வெளியானால் கூட கமெண்டில் அன்பு ரசிகர்கள் ஒரு பக்கம் மகேஷ் ரசிகர்கள் ஒரு பக்கம் என அடித்துக் கொள்கிறார்கள். ஹீரோயின் யாருடன் சேர்கிறாரோ அவர்தான் ஹீரோ என்பது தான் இந்த சீரியலின் முடிவு.

குறிப்பிட்ட காலகட்டத்தில் மகேசை வில்லனாக இயக்குனர் மாற்றிப் பார்த்தார். ஆனால் இது ரசிகர்களிடையே எடுபடாமல் பெரிய எதிர்ப்பு எழுந்தது.

தற்போதைய சூழ்நிலையில் மகேஷ் மற்றும் அன்புவின் ரசிகர்கள் இரு தரப்பையும் திருப்திப்படுத்தும் படியான கிளைமாக்ஸ் எடுக்க முடியாமல் இயக்குனர் திணறி வருவதாக தெரிகிறது.

தற்போது துளசி கேரக்டர் உள்ளே வந்திருப்பதால் மகேஷ் உடன் துளசியை சேர்த்து வைத்து மகேஷ் ரசிகர்களுக்கு நியாயம் சேர்க்கத்தான் அதிக வாய்ப்பு இருக்கிறது.