சிங்கப்பெண்ணில் துளசியை ஆட்டத்திற்குள் கொண்டு வந்த அந்த நபர்.. ஆதாயத்துடன் ஆனந்திக்கு கொடுக்கும் நெருக்கடி!

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் இன் இன்றைய ப்ரோமோ வெளியாக இருக்கிறது. துளசி சம்பந்தமே இல்லாமல் ஆட்டத்திற்குள் நுழைந்தது எதனால் என்ற சந்தேகம் இதுவரை நேயர்களுக்கு இருந்து வந்தது.

நிச்சயதார்த்த மேடை வரை சென்று அதன் பின்னர் அன்பு வேண்டாம் என்று சொன்னபோது கூட துளசி உள்ளே நுழையவில்லை. ஆனால் அன்பு மற்றும் ஆனந்திக்கு இணையே மிகப்பெரிய பிரிவு ஏற்பட்டிருக்கும் போது துளசி உள்ளே வந்திருக்கிறார்.

ஆனந்திக்கு கொடுக்கும் நெருக்கடி!

அது மட்டும் இல்லாமல் அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷின் மனநிலை என்ன என்பதை சரியாக புரிந்து வைத்திருக்கிறாள். மேலும் இன்றைய எபிசோடில் துளசி, ஆனந்தி மற்றும் மகேஷை நேரில் சந்தித்து பேசவும் இருக்கிறாள்.

இதிலிருந்தே துளசி, அன்பு மற்றும் ஆனந்தியை சேர்த்து வைக்க தான் கதைக்களத்தில் நுழைந்து இருப்பது நன்றாக தெரிகிறது. துளசியை இந்த ஆட்டத்திற்குள் கொண்டு வந்தது யார் என்பதுதான் பெரிய சந்தேகமாக இருந்தது.

அதற்கு விடை தான் அன்புவின் தங்கை யாழினி. அன்பு மற்றும் ஆனந்தி இடையே ஏற்பட்ட விரிசலுக்கு பின்னர் யாழினி ஆனந்தியை பிடிக்காதது போல் காட்டிக் கொள்கிறாள். ஆனால் இவர்கள் எந்த அளவுக்கு காதலித்தார்கள் ஆனந்தியை தன்னுடைய அம்மாவுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என யாழினிக்கு தெரியும்.

அதனால் தான் அன்பு மற்றும் ஆனந்தியை சேர்த்து வைக்க துளசியின் உதவியை கேட்டிருக்கிறார். இனி வரும் எபிசோடுகளில் துளசியின் அடுத்த கட்ட நகர்வு மற்றும் ஆனந்தியின் கர்ப்பம் என அத்தனையும் வெட்ட வெளிச்சமாக அதிக வாய்ப்பு இருக்கிறது