Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின்இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ஆனந்தி எதற்காக தன்னை விட்டு விலக நினைக்கிறாள் என்ற காரணத்தை தெரிந்து கொள்ளாமல் அன்பு நெருப்பில் சிக்கிய புழுவாய் தவித்துக் கொண்டிருக்கிறான்.
இந்த நேரத்தில் நெருப்பை இன்னும் தூண்டி விடும் விதமாக துளசியின் கேரக்டர் உள்ளே நுழைந்து இருக்கிறது.
தன்னுடைய கர்ப்பத்தால் அன்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என ஆனந்தி நினைக்கிறாள். அதனால் எப்படியாவது அன்பு வைத்து துளசியுடன் சேர்த்து வைக்க வேண்டும் என அரை மனதாய் முயற்சி செய்கிறாள்.
அன்பு மற்றும் ஆனந்தி நெருங்கி பழகுகிறார்கள் என்பது துளசிக்கு ஒரு பெரிய தடையாக இருந்தது. தற்போது அந்த தடையை தகர்க்கும் விதமாக துளசிக்கு, யாழினி ஒரு பெரிய துருப்பு சீட்டை கொடுத்திருக்கிறாள்.
அதாவது, அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் தற்போது பெரிய அளவில் நெருக்கமாக இல்லை என்ற விஷயத்தை சொல்கிறாள்.
மேலும் ஆனந்தியின் மனதில் அன்பு இப்போதைக்கு இல்லை என்றும் சொல்கிறாள். ஏற்கனவே அன்புவின் மனதில் இடம் பிடிக்க காத்திருக்கும் துளசிக்கு இது அல்வா சாப்பிடும் விஷயமாக கிடைத்து விடுகிறது.
இனி துளசி அன்புமையும் நெருங்கும் விதம் வேறு மாதிரியாக இருக்கப் போகிறது. அதே நேரத்தில் முத்து மற்றும் சௌந்தர்யா மூலம் அன்பு – ஆனந்தி இருவருக்கிடையே நடக்கும் பிரச்சனையை மகேஷ் தெரிந்து கொள்கிறான்.
துளசி அன்புவை நெருங்கும் நேரத்தில் மகேஷ் மூலம் இந்த முக்கோண காதல் கதைக்கு முடிவு வருகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.