Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த சீரியலின் இந்த வார கதைகளம் முழுக்க துளசியை சுற்றித்தான் நகர இருக்கிறது. துளசி நேரடியாக ஆனந்தியை பார்க்க ஹாஸ்டலுக்கு வந்த போது இந்த எபிசோடு மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது.
அதிலும் இந்த ப்ரோமோவில் துளசி, ஆனந்த இடம் பேசும் விஷயம் சீரியலுக்கு ஒரு பெரிய திருப்புமுனையை கொடுக்க இருக்கிறது. சின்ன வயதில் இருந்தே அன்பு மீது ஆசைப்பட்ட துளசி, அன்பு வேறொரு பெண்ணை காதலிக்கிறார் என்று தெரிந்து கூட அவனிடம் எந்த பிரச்சனையும் செய்யவில்லை.
ஆனால் அன்பு பற்றி அவளுக்கு வந்த மொட்டை கடிதத்தால் தான் இன்று அன்புவை தேடி வந்திருக்கிறாள். மேலும் இந்த கடிதத்தை தனக்கு யார் எழுதியிருப்பார்கள் என்பதுதான் துளசியின் சந்தேகம். அந்த சந்தேகத்திற்கு விடை தேட வந்த துளசிக்கு கடிதத்தை போட்டது ஆனந்தி தான் என தெரிந்து விட்டது.
இனி ஆனந்தி எதனால் அந்த கடிதத்தை எழுதினால் என்பதை துளசி கண்டுபிடிக்க வேண்டும். அத்தோடு ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணம் என்று தெரிந்து கொண்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த கதை ஆகிவிடும். துளசியின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்து வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.