Singapenne: சன் டிவியின் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய நாளுக்கான ஸ்பெஷல் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பம் சவ்வாய் இழுத்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் திடீரென துளசி என்ட்ரி கொடுத்தது எல்லோருக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது.
நிச்சயதார்த்தம் வரை சென்று அந்த இடத்தில் அன்பு தான் வேறொரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னான். அப்போதெல்லாம் வெளியில் வராத துளசி இப்போது வெளியில் வந்திருக்கிறாள். இந்த ப்ரோமோ முழுக்க முழுக்க துளசியின் பார்வையில் வெளியாகி இருக்கிறது.
மகேசுடன் கை கோர்க்கும் துளசி!
ஆனந்தியை உயிருக்கு உயிராய் காதலிக்கும் அன்பு, தன்னுடைய காதலியின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் மகேஷ், ஏதோ ஒரு பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் ஆனந்தி என அத்தனை பேரையும் சரியாக கணிக்கிறாள் துளசி.
முதல் வேலையாக துளசி அன்புவிடம் இது குறித்து பேசுகிறாள். அதை தொடர்ந்து இந்த ப்ரோமோவில் துளசி ஆனந்தியை நேரடியாக சென்று சந்திப்பது போல் காட்டப்படுகிறது. அதே மாதிரி மகேசையும் நேரில் சந்தித்து பேசுகிறாள்.
துளசி அன்புவின் மனதை மாற்றி அவனை திருமணம் செய்து கொள்ள வந்தது போல் காட்டப்பட்டது. இந்த ப்ரோமோவை பார்க்கும் பொழுது ஆனந்திக்கு என்ன பிரச்சனை என்று தெரிந்து கொண்டு அதை சரி செய்யாமல் முயற்சிப்பது போல் தெரிகிறது.
ஆனந்தியின் கர்ப்பத்தை அறிந்து கொண்டு மகேஷ் உடன் அவனை சேர்த்து வைக்கிறாளா, அல்லது அன்பு மற்றும் ஆனந்தியை சேர்த்து வைக்க புதிய வழியை கண்டுபிடிக்கிறாளா என பொறுத்திருந்து பார்க்கலாம்.