இந்தியாவில் சமீபகாலமாக கொரோனா 2ம் அலை படு தீவிரமாக பரவி வருவதால் மருத்துவர்கள் என்ன செய்வது என தெரியாமல் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலில் ஓரளவிற்கு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இந்தியா மக்களின் அலட்சியத்தால் 2 அலை படு தீவிரமாக பரவி பல பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் கொரோனா தோற்றால் பல பிரபலங்கள் கூட இறந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது மும்பை நவி பகுதியை சேர்ந்த இந்தியா ஆண் அழகன் ஜெகதீஷ் லாட் கொரோனாவால் மரணமடைந்துள்ளார்.
உடல் கட்டுப்பாட்டில் மிகவும் கவனம் செலுத்திவந்த ஜெகதீஸ் லாட் எப்படி கொரோனா தொற்று வந்தது என பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடல் பாதுகாப்பில் கவனம் செலுத்தி வந்த இவருக்கு இந்த நிலைமை என பலரும் பயந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இவருக்கு ரயில்வே துறையில் வேலை கிடைப்பதாக இருந்து பின்பு வயது காரணமாக கிடைக்காமல் போனது. தற்போது இவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.