சினிமா என்றாலே விபச்சாரத்தை விட மோசமானது என கருத வைக்கும் அளவுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து வருகின்றன. அதிலும் நடிகைகளிடம் அத்துமீறும் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் ஏராளமாக இருக்கின்றனர்.
காசு கொடுத்தால் நடிகைகள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்ற முற்போக்கு சிந்தனை தான் இத்தனைக்கும் காரணம் என்கிறார்கள் சினிமா வாசிகள். ஒரு சிலர் அப்படி இருப்பதால் பலருக்கும் அதேநிலை தொடர்கிறது.
சினிமாவுக்கு வரும் நடிகைகள் பெரும்பாலும் சாதிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப காலகட்டங்களில் சின்ன சின்ன அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வருவது வழக்கம்தான். இதில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தங்களது தனிப்பட்ட முயற்சியால் முன்னேறுவார்கள்.
அப்படி பாலிவுட் சினிமாவில் காமெடி பேச்சாளராக இருந்து தற்போது சினிமாவில் பிரபலமாக தொடங்கி இருப்பவர் தான் பாரதி சிங். இவர் ஒருமுறை ஒரு ஸ்டேஜில் பாடிக்கொண்டிருக்கும் போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காமெடி நடிகர் ஒருவர் இவரின் பின்பக்கம் தடவினாராம்.
அதன் பிறகு இந்த நடிகையிடம் சகஜமாக பேச்சுக் கொடுத்துக்கொண்டே அவருடைய செல்போன் நம்பரை வாங்கி விட்டாராம். இரவில் தன்னுடன் இரட்டை அர்த்தங்களில் பேசி தன்னை அந்த தொல்லைக்கு உட்படுத்தியதாகவும் கூறியுள்ளார் அந்த நடிகை.
சமீபகாலமாக சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகள் அதிகரித்துள்ளதாம். முன்னரெல்லாம் ரகசியமாக நடந்து வந்த இந்த அட்ஜஸ்ட்மெண்ட்கள் தற்போது வெளிப்படையாக கேட்கும் அளவுக்கு வளர்ந்துள்ளதுதான் வேதனையை கொடுக்கிறது என்கிறார் அந்த நடிகை.
