சினிமா செய்திகள்

அவர் மலைமேல் இருக்கும் தீபம்.. தனுஷ் சொன்ன அந்த வார்த்தையால் நெகிழ்ந்த ரசிகர்கள்

By Vijay · 14 பிப் 2022 · Updated 07 மே 2025
rajini-aishwarya-dhanush

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்குவதாகவும் அனிருத் இசையமைப்பது படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தனர். ஒரு பக்கம் சந்தோஷம் இருக்கும் ரசிகர்கள் மற்றொரு பக்கம் சோகம் அடைந்தனர்.

அதாவது ரஜினிகாந்துக்கு சமீபகாலமாக குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் வருவதாக செய்தி வெளியானதையடுத்து அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இடையே ஒரு சில கருத்து வேறுபாடுகள் சமீபகாலமாக அதிகரித்துள்ளது.

அதனால் இருவரும் தங்களது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி விவகாரத்தை அறிவித்தனர். இது பலருக்கும் பேசுபொருளாக அமைந்தது. ஒவ்வொருவரும் எது உண்மை என்பது கூட தெரியாமல் பல தகவல்களை பகிர்ந்து வந்தனர்.

ரஜினிகாந்த் இருக்கும் லதாவுக்கும் பிரச்சினை இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும் ஐஸ்வர்யாவிற்காகவும் சௌந்தர்யாவிற்காகவும் தங்களது கோபத்தை குறைத்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். அதேபோல்தான் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவிற்கும் இருக்கும் சிறு சிறு பிரச்சினைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒன்று சேர வேண்டும் என இரு தரப்பினரிடமும் கூறியுள்ளார். உங்கள் மகன் யாத்ரா லிங்காவிற்காக ஒன்று சேருங்கள் என கூறியுள்ளார்.

ஆனால் பல மாதங்களாக இவர்களுக்குள் இருந்த வேறுபாடு அதிகமானதால் தான் தனுஷ் இந்த முடிவை எடுத்துள்ளார். அதனால் விவாகரத்து முடிவிலிருந்து தனுஷ் மாறியிருப்பதாகவும் கூடிய விரைவில் இவர்கள் இருவரும் ஒன்று சேர இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.மேலும் ரஜினியின் என்னையும் ஒப்பிடாதீர்கள் ரஜினியின் படங்கள் வேறு என்னுடைய படங்கள் வேறு என அவர் பழைய பேட்டியில் கூறியிருந்தார்.

அவர் திரைப்படத்தை மையமாக வைத்து கூறினார். ஆனால் பலரும் இதனை தவறாக புரிந்து கொண்டு தனுஷ் தற்போது ரஜினியை மறைமுகமாக பேசி வருவதாக கூறி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் தனுஷ் சினிமாவைப் பற்றி எதார்த்தமாக அவர் கூறியுள்ளார் என கூறி வருகின்றனர்.