நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் தற்போது யாரும் எதிர்பாராத அளவுக்கு எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருகிறது. விஜய் ரசிகர்களே படத்தை ஒரு முறை பார்க்கலாம் என்று கூறுவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இது விஜய் உட்பட படக்குழுவினருக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் என்று விஜய்யும் கொஞ்சம் ஜாலியாக இந்த படத்தை முடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரின் நம்பிக்கையை காப்பாற்றாமல் நெல்சன் இப்படி மோசமான விமர்சனங்களை பெற வைத்ததால் விஜய் ரொம்ப அப்செட்டில் இருக்கிறாராம்.
அதனால்தான் இருவரும் கலந்து கொண்ட பேட்டியில் கூட படம் எப்படி வந்திருக்கிறது என்று நெல்சன் கேட்டபோது விஜய் யாருக்கு தெரியும் படம் வெளியில் வந்தால்தான் தெரியும் என்று அசால்டாக கூறினாராம். மேலும் அடுத்த படத்தில் எவ்வளவு கோடி சம்பளத்தை அதிகப்படுத்தலாம் என்ற நினைப்பிலேயே இந்த படத்தின் திரைக்கதையை நெல்சன் கோட்டை விட்டு விட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது.
அதோடு தயாரிப்பு தரப்புக்கும் ஏகப்பட்ட செலவுகளை இழுத்து விட்டாராம் நெல்சன். அவரை நம்பி அடுத்ததாக சூப்பர் ஸ்டாரின் படத்தை கொடுத்திருக்கும் சன் பிக்சர்ஸ் தற்போது அந்த முடிவை மாற்றிக் கொள்ளலாமா என்ற யோசனையிலும் இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்பு கூட நெல்சனுக்கு விஜய் தான் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அதைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் சூப்பர் ஸ்டார் படம் கிடைத்து விட்டதே என்ற மிதப்பில் அவர் விஜய்க்கு இப்படி ஒரு சறுக்கலை கொடுத்துள்ளார்.
இதனால் விஜய் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். இனி இதுபோன்ற கதையை கூறிக்கொண்டு யாரும் விஜய்யை சந்திக்க வந்தால் அவர்களை அப்படியே துரத்தி விடும் படி தன்னுடைய குழுவினருக்கு அவர் ஸ்ட்ரிக்டாக ஆர்டர் போட்டிருக்கிறாராம்.
மேலும் இது போன்ற ஒரு விமர்சனம் இனி வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர் ஹீரோவுக்கு பில்டப் தரும் கதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டாம் என்ற முடிவிலும் இருக்கிறார். மேலும் திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படியாகவும், வில்லன் கேரக்டர் வெயிட்டாக இருக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளார். இதனால் அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் இயக்குநர் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.