சினிமா செய்திகள்

திருமணத்திற்கு பின்பும் கொழுப்பெடுத்து திரிந்த நடிகை.. மாமனார் முன்பு அரைகுறை ஆடையில் அலைந்த கேவலம்

By Vijay · 03 ஜூலை 2023 · Updated 08 மார்ச் 2026
gossip-actress

படு கேவலமான ஒரு படத்தில் நடித்து பிரபலமானவர் தான் அந்த நடிகை அதன் பிறகு ஓரிரு நல்ல படங்களில் நடித்து வந்த நடிகைக்கு பிரபல இயக்குனர் ஒருவரின் நட்பு கிடைத்தது. மரியாதையான குடும்பத்தில் வளர்ந்த அந்த இயக்குனர் இந்த நடிகையின் மேல் காதல் வயப்பட்டது தான் ஆச்சரியம்.

வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து விட்டாரோ என்னவோ இந்த நடிகையின் மயக்கத்திலேயே அந்த இயக்குனர் இருந்திருக்கிறார். அதை தொடர்ந்து நடிகை மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனரை திருமணமும் செய்து கொண்டார்.

நடிகையின் குணத்தை பற்றி தெரிந்தவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சி தான். ஏனென்றால் அந்த நடிகை வாய்ப்புக்காக எத்தனை பேரை அட்ஜஸ்ட்மென்ட் செய்திருக்கிறார் என்று அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் இயக்குனருடன் காதலில் இருக்கும் போதே பிரபல ஹீரோ ஒருவரையும் அவர் தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருமணத்திற்கு பிறகாவது அவர் திருந்துவார் என்று பார்த்தால் அவருடைய ஆட்டம் அதிகமாகத்தான் இருந்திருக்கிறது. அதாவது கணவர் வீட்டில் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது, மாமனார் இருக்கும்போது குட்டி குட்டி உடையில் அரைகுறையாக உலாத்துவது என்று மோசமாக நடந்திருக்கிறார்.

இதைப் பார்த்து முகம் சுளித்த குடும்பத்தினர் தன் மகனிடம் இது குறித்து கூறியிருக்கிறார்கள். இயக்குனரும் மனைவியை அடக்க படாதபாடு பட்டிருக்கிறார். ஆனால் கொழுப்பு எடுத்து திரிந்த அந்த நடிகை திருமணமான சில மாதங்களில் கணவரை பிரிந்து விவாகரத்தும் வாங்கி விட்டார். இப்போது நடிகை பணத்துக்காக ஒரு பெரிய தொழிலதிபரை வளைத்து போட்டு இருக்கிறார்.