சிறப்பு கட்டுரைகள்

“ஐஸ்வர்யா ராய்-யை அழவைத்த கதை: பிரபல இயக்குனர் பகிர்ந்த ரகசியங்கள்”

By Vijay · 03 செப் 2025 · Updated 07 மார்ச் 2026
The story that made Aishwarya Rai cry

Cinema : 90களின் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மின்சார கனவு மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்கள் மறக்க முடியாதவை. இந்த இரண்டு படங்களின் ஹீரோயின் தேர்வு சம்பவம் குறித்த தகவலை இயக்குநர் ராஜீவ் மோகன் பகிர்ந்துள்ளார்.

ராஜீவ் மோகனின் பேச்சுப்படி, மின்சார கனவு படத்தில் ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராய்-யை நடிக்க அழைத்தாராம். ஆனால் அப்போது மணிரத்னம் அவர்களை ‘இருவர்’ படத்துக்கு அழைத்திருந்ததால், அப்படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால், மின்சார கனவில் அந்த கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த மாற்றம் அப்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துக்காக ஹீரோயினை தேர்வு செய்யும் பணியில், முதலில் மஞ்சு வாரியார் கிட்ட பேசப்பட்டதாம். ஆனால் மஞ்சு வாரியார் பதில் சொல்லவில்லை. பின்னர் அந்த வாய்ப்பு சௌந்தர்யாவிடம் சென்றது. அவரும் படத்தை ஏற்கவில்லை. இறுதியில், அந்த வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்தது.

ஐஸ்வர்யா ராய் கதை கேட்டவுடன் மிகுந்த எமோஷனல் ஆகி, உடனே நடிக்க சம்மதித்தார். இந்த முடிவு படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் ஆனது. அந்த கதாபாத்திரம் இன்று வரை தமிழ் சினிமாவின் முக்கியமான கதாபாத்திரங்களில் ஒன்றாக ரசிகர்களால் நினைவுகூரப்படுகிறது.

பொருந்திப்போன ஐஸ்வர்யா ராய்..

அதுமட்டுமல்லாமல், ஐஸ்வர்யா ராய், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்ததது இந்த படத்திற்கு ஒரு பிளஸ். இன்று வரை இந்த கதாபாத்திரம் அனைவராலும் பேசப்படுகிறது. ஐஸ்வர்யா ராயை தவிர வேற யாரும் இந்த கதாபாத்திரத்திற்கு இவ்வளவு உயிர் கொடுத்திருக்க முடியாது என்று மக்களும் கூறுகின்றனர்.

இந்த அனுபவங்களை பகிர்ந்த இயக்குநர் ராஜீவ் மோகன், “சினிமாவில் கதை, நடிகர்கள், நேரம் ஆகியவை சரியாக சேர்ந்தால் தான் படம் வெற்றி பெறும்” என்று கூறியுள்ளார். 90களின் தமிழ் சினிமாவில் ஹீரோயின்களின் தேர்வு கதைகள் எவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தன என்பதை இந்த சம்பவங்கள் தெளிவாக காட்டுகின்றன.

இந்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பழைய படங்களின் ரசிகர்களை நெகிழச்செய்கின்றன. மின்சார கனவு மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்கள், நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் தமிழ் சினிமாவின் பொற்காலக் காட்சிகளாக என்றும் இருக்கும்.