Jigarthanda DoubleX

சுயசரிதையை மாத்தி எழுதலாமா?. எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸின் வெறித்தனமான 2 ட்ரெய்லர்

Jigarthanda DoubleX – Trailer: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்  ஆன படம் தான் ஜிகர்தண்டா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் சற்றுமுன் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இந்த படம் 1975ல் நடப்பதாக காட்டப்பட்டுள்ளது.  எஸ்ஜே சூர்யா லாரன்ஸை வைத்து படம் எடுக்கிறார்.

அந்த படம் எப்படி உருவாகிறது, இந்த படம் எடுக்கும் போது நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை ஆக்சன், காமெடி கலந்து காட்டப்படுகிறது. ஏற்கனவே ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகத்தில்  ரவுடியான பாபி சிம்ஹாவை வைத்து சித்தார்த் ஒரு படம் எடுத்தார்.

அதேபோன்றுதான் இரண்டாம் பாகத்தில் முரட்டு ரவுடியாக இருக்கும் லாரன்ஸை வைத்து எஸ்ஜே சூர்யா படம் எடுப்பது போல் திரை கதையை அமைத்திருக்கின்றனர். ட்ரெய்லரில் லாரன்ஸ் சொல்லும் டயலாக் அல்டிமேட் ஆக இருக்கிறது.

‘கருப்பா இருந்தா கேவலமா’, ‘தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ’, ‘நல்லவங்கள பத்தி படம் எடுத்தால் யாரும் பார்க்கிறதில்லை’ , ‘சுயசரிதையை கொஞ்சம் மாத்தி எழுதிரலாமா?’, ‘இங்கு எவனும் எதையும் புதுசா எழுதிட முடியாது. பேனாவை கெட்டியா மட்டும் பிடிச்சு கிட்டா போதும் எழுதப்பட்டது எழுதப்படும்’ என இந்த ட்ரெய்லரில் இடம் பெறும் டயலாக் எல்லாம்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படம் நிச்சயம் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக அமையும் என்று  ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.

conjuring-kannappan-trailer-IMAGE

சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Conjuring Kannappan Trailer: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கும் இந்த படம் காமெடி கலந்த திரில்லர் ஜோனரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பு சந்தானம் தான் இது போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். இப்போது காமெடி நடிகரான சதீஷ் புது முயற்சியாக சந்தானம் பாணியில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இதில் சதீஷ் உடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சதீஷ் தன்னுடைய கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்கிறார். அங்கு அவர் பேய் இடம் அடி வாங்குவது நிஜத்தில் வலிக்கிறது.

ஒருவேளை அந்த கனவில் இறந்து விட்டால் நிஜத்திலும் இறந்து விடுவாய் என்று, படத்தில் டாக்டராக வரும் நாசர் பயமுறுத்துகிறார். இந்தப் பேய் கனவில் சதீஷ் உடன் மொத்த குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. அதிலும் சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டிகளால் கலகலப்பான மூடுக்கு மாறுகிறது.

இதில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் இறுதியில் ஆனந்தராஜ் பேசிய டயலாக் ஆனா ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்ல கொலாபிரேட் பண்ணி விட்டு இருக்கீங்களே டா!’ என பேசியது அல்டிமேட் ஆக இருந்தது.

காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுக்கும் சுந்தர்.சி, லாரன்ஸை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த இதே வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

bb7-kamal-promo

கதவு மூடாம பாத்ரூம் போறான், கெட்ட வார்த்தையில் அசிங்கமா பேசுறான்.. இன்று ஆண்டவர் கொடுக்க போகும் சாட்டையடி

Bigg Boss Tamil Season 7 | 4th November 2023 – Promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி துவங்கப்பட்ட நாளிலிருந்து காரசாரமாக ஒளிபரப்பாகிறது. அதிலும் வீகென்ட் எபிசோடுகளில் பிக் பாஸ் போட்டியாளர்களை ஆண்டவர் வெளுத்து வாங்குவதால் அன்றைய நிகழ்ச்சிகள் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் ஆகவே மாறிவிட்டது.

அதிலும் இந்த சீசனில் இதுவரை வந்ததில் மாஸான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கும் இந்த ப்ரோமோ தான். இந்த சீசனின் வெற்றியாளர் இவர்தான் என பலரும் யூகித்த பிரதீப்பின் ஆட்டம் தாங்காமல் மொத்த பிக் பாஸ் வீடே கொந்தளித்துள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் பிரதீப்புக்கு எதிராக முழு பிக் பாஸ் வீடே செங்கொடியை உயர்த்தி இருக்கிறது.

கடந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் பிரதீப்பின் அழுச்சாட்டியம் கொஞ்சம் நஞ்சமல்ல. ‘கெட்ட வார்த்தைகளை கோபத்தில் பேசினால் கூட பரவாயில்லை, தவறான நோக்கத்தில் பேசியது ரொம்பவே தப்பா இருக்குது’ என்று ஜோவிகா பிரதீப்புக்கு எதிராக உரிமைக்குரல் பேண்டை கையில் போட்டுக்கொண்டு கமலிடம் நியாயம் கேட்டார்.

இவரைத் தொடர்ந்து விஷ பாட்டில் பூர்ணிமா, ‘பிரதீப்பால் இந்த வீட்டில் தூங்கவே பயமா இருக்குது’ என்றும் நிக்சன், ‘பிரதீப் பேசுவதை தவறு என்று கூட ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறார். நான் பேசுவது தப்பெல்லாம் கிடையாது, இப்படி தான் பேசுவேன் என்று திமிரு காட்டுகிறார்’ அவரைத்தொடர்ந்து ரவீனா, ‘ஒரு பெண் என்று கூட பார்க்காமல் என்னுடைய இடுப்பில் அணிந்திருந்த அரைஞாண் கயிறை குறித்து பிரதீப் அசிங்கமாக விமர்சிக்கிறார்’ என்றும் விஷ்ணு, ‘பிரதீப்பிடம் யாராவது ஏதாவது கேட்க நினைத்தால் அவர்களை அசிங்க அசிங்கமாக பேசி விடுவேன் என்று ஆப் செய்கிறார்’.

தொடர்ச்சியாக மணி, ‘இன்று கூட பிரதீப் பாத்ரூம் போகும்போது கதவை அடைத்துக் கொள்ளாமல் திறந்து போட்டுக்கிட்டே டாய்லெட் போகிறார்’ என்று பிரதீப்பின் மீது ஹவுஸ் மேட்ஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஆண்டவர், ‘இதற்கெல்லாம் என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்று எனக்கு தெரியும்’ என கோபத்துடன் பதில் அளித்தார்.

இன்னைக்கு பிரதீப்புக்கு சம்பவம் இருக்கு .சைக்கோ போல அவ்வப்போது நினைத்ததை எல்லாம் பேசிக்கொண்டு சிரிக்கும் பிரதீப் கடந்த வாரம் கொஞ்சம் ஓவராகவே தான் ஆடினார். இதற்கெல்லாம் நிச்சயம் இன்று ஆண்டவர் சரியான சவுக்கடி கொடுக்கப் போகிறார். வன்முறையாக நடந்து கொண்டதற்காக விஜய் வர்மாவை ரெட் கார்ட் கொடுத்து எலிமினேட் செய்தது போல், பிரதீப்புக்கும் இன்று ரெட் கார்ட் கொடுக்கப் போகின்றனர்.

bb7=promo

பிக் பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் இவர்தான்.. தலைகீழாக மாறப் போகும் ஸ்மால் பாஸ் வீடு

Bigg Boss Tamil Season 7 | 3rd November 2023 – Promo 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொடர்ந்து இரண்டு வாரங்களாக விஷ பாட்டில் பூர்ணிமா தான் கேப்டன் ஆக இருந்து வருகிறார். அடுத்த வாரம் மூன்று பேர் கேப்டன்ஷிப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் நடந்த எல்லா போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய கூல் சுரேஷ் மற்றும் மாயா இருவரும் அடுத்த வார தலைவருக்கான போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா தேர்வானார். கூல் சுரேஷ், விசித்ரா, மாயா இவர்கள் மூன்று பேருக்கும் தான் அடுத்த வார தலைவருக்கான போட்டி நடத்தப்பட்டது.

மேடையில் ஒரு காலை தூக்கிக் கொண்டு இன்னொரு காலில் மட்டுமே அதிக நேரம் யார் நிற்கிறார்களோ அவர்கள்தான் அடுத்த வார கேப்டன் ஆக முடியும். இந்த போட்டியில் விசித்ரா மிகக் குறைந்த நேரம் மட்டுமே ஒரு காலை தூக்கி கொண்டு நிற்க முடிந்தது. அவர் வெளியேறியதும் மாயா, கூல் சுரேஷ் இருவருக்கும் கடும் போட்டி நிகழ்ந்தது. ஆனால் கூல் சுரேஷ் ஒரு கட்டத்தில் தடுமாறி காலை ஊன்றி விட்டார்.

கடைசியாக மாயா தான் வெற்றி பெற்று அடுத்த வாரம் கேப்டன் ஆனார். சும்மாவே மாயாவின் ஆட்டம் தாங்காது, இதுல அவர் அடுத்த வார கேப்டன் ஆகிவிட்டால் பிக் பாஸ் வீடே தலைகீழாக மாறிவிடும். அதிலும் ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் யார் போக வேண்டும் என்பதை கேப்டன் தான் முடிவெடுப்பார்.

தனக்கு யாரெல்லாம் பிடிக்காதோ அவர்களை எல்லாம் மாயா ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் பொறுக்கி போட போகிறார். குறிப்பாக ரவீனா- மணி இருவரும் காதல் பறவைகளாக பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கின்றனர். அவர்களை அடுத்த வாரம் வச்சு செய்யப் போகிறார். ஏனென்றால் மணியை மாயாவுக்கு சுத்தமாகவே பிடிக்காது, அந்த வெறுப்பை அவர் கேப்டன் ஆனதும் காட்டுவார்.

ஆனால் இந்த கேப்டன்ஷிப் போட்டிக்கு ஸ்மால் பாஸ் வீட்டிலிருந்து விசித்ராவிற்கு பதில் தினேஷ் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்தான் அடுத்த வார தலைவராகி இருப்பார். தினேஷ் மட்டும் கேப்டன் ஆகி இருந்தால் பிக் பாஸ் சீசன் 7ல் இது வரை இல்லாத ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கும். கடந்த வாரம் திடீரென என்ட்ரி கொடுத்த 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களுள் தினேஷ் மட்டும் தனித்துவமாக விளையாடுகிறார். அவர் பைனல்ஸ் வரை செல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.

gossip-actor

மகள் வயதில் இருக்கும் பெண்ணை படுக்கைக்கு அழைத்த காமெடியன்.. செருப்பை கையில் எடுத்த தொகுப்பாளினி

முதலில் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், அதன் பிறகு நடிகராக குணச்சித்திர வேடங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்தார். அதன் பின் நல்ல கேரக்டர் ஆர்டிஸ்ட், சிறந்த

vichithra-bb7

விசித்ராவை வச்சு செய்த 5 போட்டியாளர்கள்.. கெட்ட வார்த்தையால் அர்ச்சனை செய்து வெளியேறிய சம்பவம்

Bigg Boss Tamil Season 7 Today Promo: இன்று வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருக்கும் விசித்ராவை 5 போட்டியாளர்கள் வச்சு செய்து விட்டனர். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு போன அவர் வாயில் என்ன வார்த்தை வருகிறது என்று கூட தெரியாமல் சரமாரியாக கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டார்.

அது மட்டுமல்ல ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி தன்னையே அறியாமலும் அழுதுவிட்டார். அந்த வீட்டில் எனக்கு பைத்தியமே பிடிக்குது என்றும் கதறுகிறார். இந்த வார கேப்டனான பூர்ணிமாவிடம் விசித்ரா ‘எதுக்குடி என்ன ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பிச்சீங்க’ என்று சண்டைக்கு நிற்கிறார்.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஸ்மால் பாக்ஸ் வீட்டில் இருக்கும் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்களும் கிளாமர் குயின் விசித்ராவை வச்சு செய்கின்றனர்.  பிக் பாஸ் வீட்டில் மூத்தவராக இருக்கும் விசித்ரா அப்போது மற்ற போட்டியாளர்களுக்கு அறிவுரை சொல்வார்.

ஆனால் வைல்ட் கார்ட் என்ட்ரிகளாக உள்ளே வந்திருப்பவர்கள் யாருமே விசித்ராவை சுத்தமா மதிக்கவில்லை. அவர் சமையல் செய்யும்போது வேண்டிய உதவிகளை செய்யாமல் எனக்கென்னன்னு இருக்கிறார்கள்.  அதிலும் குறிப்பாக அர்ச்சனா விசித்ராவிடம் ஓவராக திமிரு காட்டுகிறார்.

இதனால் பொறுமையை இழந்த விசித்ரா விதிகளை மீறி ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்து பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். அவரை சமாதானப்படுத்தி எப்படியாவது மறுபடியும் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் முயற்சிக்கின்றனர். விசித்ரா விதிகளை மீறி பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததால் கேஸ் கட் ஆகும்.

கேஸ் இல்லாம யாராலும் சமைக்க முடியாது, எல்லாரும் சாப்பிடாமல் மூடிக்கிட்டு இருங்க’ என்று கெட்ட வார்த்தைகளால் விசித்ரா அர்ச்சனை செய்கிறார். இந்த சம்பவத்தால் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் உறைந்து போனார்கள். இன்றைய நிகழ்ச்சி விசித்ராவால் சூடு பிடித்துள்ளது.

bb7-house-cinemapettai

சில்ர பயலே, செருப்பால அடிப்பேன் நாயே.. பிக் பாஸில் நிஜ முகத்தை காட்டியதால் ரெடியாகும் ரெட் கார்டு

Bigg Boss Tamil Season 7 | 31st October 2023 – Promo 2 : மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 7 துவங்கப்பட்ட நாளில் இருந்தே காரசாரமாக ஒளிபரப்பாகிறது. அதிலும் டைட்டிலை அடித்து விட வேண்டும் என ஒவ்வொருவரும் விதவிதமான ஸ்டேடர்ஜியை பின்பற்றுகின்றனர். பிரதீப் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என அனைவரும் நினைத்தனர். ஆனால் இவர் விஜய் வர்மாவை விட மோசமாக நடந்து கொள்கிறார்.

இவருக்கு ஸ்ட்ரைக் கார்ட் எல்லாம் வேண்டாம், ஸ்ட்ரைட்டா ரெட் கார்டே கொடுக்க வேண்டும். ‘அசைஞ்சா போச்சு’ என்ற டாஸ்க் இன்று பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டது. பெல் கொண்ட பெல்ட்டை போட்டியாளர்கள் தலையில் அணிந்து கொண்டு அந்த பெல் ஃப்ரீஸ் ஆக வைப்பது தான் டாஸ்க். அப்போது பிரதீப் கூல் சுரேஷை பார்த்து ‘அவர் மணிய ஆட்டிக்கிட்டு மட்டும் இருக்க சொல்லுங்க’ என்று இரட்டை அர்த்தத்துடன் அசிங்கமாக பேசினார்.

இவ்வளவு நாள் கூலாக பிக் பாஸ் வீட்டில் இருந்த சுரேஷ் பிரதீப்பின் அவமான பேச்சால் பெட்டியை கட்டிக்கொண்டு கிளம்ப பார்த்தார். உடனே வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்கள் அவரை அமைதிப்படுத்தி வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர். அதன் பின்பு பிரதீப் சொன்னது தப்புதான் என்று கூல் சுரேஷிடம் மன்னிப்பு கேட்க சொன்னார்கள்.

ஆனால் அப்போதும் பிரதீப், ‘நான் இப்படி தான் மரியாதை இல்லாமல் பேசுவேன். இது என்னோட ஸ்டேட்டர்ஜி’ என்று ஓவராக திமிருடன் பேசுகிறார். மக்கள் கொடுக்கிற சப்போட்டால் பிரதீப் நாளுக்கு நாள் ஓவராக ஆடுகிறார். மரியாதை இல்லாமல் பேசாதே’ என கூல் சுரேஷ் சொன்னதும், ‘சில்லறை பயலே! செருப்பு பிஞ்சிடும் நாயே’ என்று பிரதீப் எல்லை மீறிய வார்த்தைகளால் திட்டுகிறார்.

பிரதீப் பண்ணுவது கொஞ்சம் கூட சரியல்ல என ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அவருக்கு எதிராக திரும்புகின்றனர். பிரதீப்பின் உண்மையான முகத்திரை இப்போது கிழிந்து தொங்குகிறது. அதேசமயம் கூல் சுரேஷ் இப்போதுதான் தன்னுடைய ஆட்டத்தை ஆட துவங்கியிருக்கிறார்.

இனிமேல் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கப் போகிறது. மேலும் பிரதீப் பேசுவதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாளுக்கு நாள் அவர் யாருக்குமே மரியாதை கொடுக்காமல் படு கேவலமாக வார்த்தைகளை விடுகிறார். நிச்சயம் இந்த வாரம் பிரதீப்பிற்கு ஆண்டவர் ரெட் கார்ட் கொடுப்பது உறுதி.

rajini-kamal-dhanush

ரஜினி, கமல் தொட கூட பயப்படும் பயோபிக்-கில் நடிக்கும் தனுஷ்.. தேசிய விருது ஆசை கைக்கூடுமா.?

Dhanush going to act in the legend biopic: தனுஷ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறிவிட்டார். தற்பொழுது அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனுஷ்

rajini-thalaivar-171-lokesh

வில்லாதி வில்லனாக வேட்டையாட போகும் ரஜினி.. லோகேஷ்க்கு கொடுத்த ஆறு மாசம் கெடு என்ன தெரியுமா.?

Rajini Lokesh Movie Updates: லோகேஷ் லியோ படத்திலிருந்து முழுவதுமாக வெளியே வந்து விட்டார். இந்த படத்தினால் நிறைய கெட்ட பெயர்கள் லோகேஷுக்கு வந்துவிட்டது. அதைப்பற்றி கவலைப்படாமல்

gossip-actor

கள்ளக்காதலுக்கு மாமா வேலை பார்த்த நடிகர்.. 60 சவரன் நகையுடன் பாடகர் மனைவி ஓட்டம்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை அசுர வளர்ச்சி அடைந்த ஒல்லி நடிகர் ஒருவர், பிரபல பாடகரின் மனைவிக்கு மாமா வேலை பார்த்திருக்கிறார். அந்த பாடகர் தனக்கு ரசிகையாய்