மார்க்கெட் இல்லாததால் பரிதாப நிலையில் பிரியா பவானி சங்கர்.. அங்கேயும் அவமானம் தான் மிச்சம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளத்திரையில் கதாநாயகியாக நடித்து வந்தவர் பிரியா பவானி சங்கர். இவருக்கு சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் போது ஏராளமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் வெள்ளித்திரையில் இவர் திறமைக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்ற மன வருத்தம் இவருக்கு இருந்தது.

மேலும் பிரியா பவானி சங்கர் நடித்த பெருமைான்மையான படங்களில் செகண்ட் ஹீரோயினாக தான் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல படங்களுக்காக காத்திருந்த பிரியா பவானி சங்கருக்கு மார்க்கெட் இல்லதாதால் தற்போது முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

அதாவது தெலுங்கு சினிமாவில் தற்போது முதல் முறையாக பிரியா பவானி சங்கர் கால் பதிக்க உள்ளார். ஈஸ்வரன் கார்த்திக் இயக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இது அவரது 26 ஆவது படம். இந்தப் படத்தில் சத்யதேவ் மற்றும் டாலி தனஜெயா ஆகியோர் கதாநாயகனாக நடிக்கின்றனர்.

பிரியா பவானி சங்கர் உடன் இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி இருந்தது. ஆனால் இங்குதான் செகண்ட் ஹீரோயின் கதாபாத்திரம் என்றால் தெலுங்கிலும் பிரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தில் வேறு இரண்டு கதாநாயகிகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தெலுங்கு சினிமாவிலும் தனக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ள படம் கிடைக்கவில்லையே என்ற அப்சட்டில் பிரியா பவானி சங்கர் உள்ளார். மேலும் தமிழில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் அகிலன், ருத்ரன், பத்து தல, பொம்மை, இந்தியன் 2 படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இப்போது முதல்முறையாக அக்கடத தேசத்திலும் பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார் என்ற செய்தியை அறிந்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்தை குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →