சினிமா செய்திகள்

ஒய்யாரக் கொண்டையில உள்ளே இருக்குது ஈரும் பேனும்.. பெரிய குடும்பத்தின் அந்தரங்கத்தை அவிழ்த்துவிட்ட நடிகை

By Arun · 07 மே 2024 · Updated 08 மார்ச் 2026
gossip

சினிமாவில் மதிப்பு மிக்க குடும்பமாக பார்க்கப்படும் நடிகர் ஒருவரின் வீட்டில் நடக்கும் அந்தரங்க லீலைகளை பற்றி கூறியிருக்கிறார் நடிகை. பொதுவாகவே சினிமாவில் பாரம்பரியமாக சில குடும்பங்கள் இருந்து வருகிறது.

அதாவது தாத்தா, மகன், மகள், பேரன்,பேத்தி பலருமே சினிமாவில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பவர்கள். வெளியில் பார்க்க கூட்டு குடும்பமாக இருந்தால் உள்ளே பல சச்சரவுகள் சென்று கொண்டிருக்கிறதாம்.

அதுவும் அந்த குடும்பத்திற்கு நெருங்கிய உறவில் இருக்கும் நடிகை ஒருவர் தான் பல விஷயங்களை வெளியில் சொல்லி இருக்கிறார். அதாவது அந்த குடும்பத்தில் பணத்துக்கு ஆசைப்பட்டு மனைவியை குடி போதைக்கு அடிமையாக்கி உள்ளனராம்.

அதோடு மகள்களையும் சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க வைத்துள்ளனர். இதற்கும் காரணம் பணம் தான் என்று கூறப்படுகிறது. அதோடு அம்மாவே தனது மகளை ஹீரோ ஒருவருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்திருக்கிறார். சீனியர் நடிகையாக இருந்தும் தனது மகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த ஹீரோவோடு தானும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தது மட்டுமல்லாமல் தனது மகளையும் கட்டாயப்படுத்தி இருக்கிறார். மேலும் இந்த குடும்பம் கௌரவம் மிக்க குடும்பமாக வெளியில் பார்க்கப்பட்டாலும் பல லீலைகள் நடத்தி வருகிறதாம்.

ஒய்யாரக் கொண்டையில உள்ளே இருக்குது ஈரும், பேனும் என்ற பழமொழிக்கு ஏற்ப வெளியில் மவுசாக இருந்தாலும் உள்ளே காது கொடுத்து கூட கேட்க முடியாத அளவுக்கு நிறைய விஷயங்கள் அரங்கேறி வருகிறது. நடிகை இதைப் பற்றி பேசினாலும் அவர்களது செல்வாக்கால் இதையெல்லாம் ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டனர்.