சினிமா செய்திகள்

பெரும்புள்ளியை வளைத்து போட்டு பண மழையில் நனைந்த நடிகை.. ஆடம்பர வாழ்க்கைக்கு விரித்த வலை

By Vijay · 21 ஜன 2024 · Updated 07 மார்ச் 2026
gossip-actresss

Gossip: பொதுவாக வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள் என ஒரு புகார் தற்போது பூகம்பமாக வெடித்து வருகிறது. அந்த வகைகள் பல நடிகைகள் தொடர்ந்து அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் ஒரு நடிகை ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பெரும்புள்ளிகளை கைக்குள் போட்டு பண மழையில் நனைந்து வருகிறார்.

அதாவது அந்த நடிகை நடித்த முதல் படமே மிகப் பெரிய ஹிட் ஆகி அவருக்கு ஒரு ஜாக்பாட் ஆக அமைந்துவிட்டது. அதனால் தொடர்ந்து இளம் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு ஹிட் படங்களை கொடுத்து வந்தார். இப்படி பிசியாக இருந்த அந்த நடிகை பிசினஸிலும் கவனம் செலுத்தி ஏகபோக வாழ்க்கையே வாழ ஆரம்பித்து விட்டார்.

அதனால் அவருடைய சொந்த ஊரிலும் ஏகப்பட்ட சொத்துக்களை வாங்கி குவித்தார். ஆனால் என்னமோ அந்த நடிகைக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை ரொம்பவே போரிங்காக அமைந்து விட்டது. அத்துடன் அந்த சொந்தக்காரங்களுடன் இருக்கும் சூழ்நிலையும் பிடிக்காமல் போய்விட்டது. இதனால் இது எதுவுமே வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு கோவாவில் ஆடம்பரமான ஒரு பங்களாவைக் கட்டலாம் என்று முடிவு எடுத்தார்.

அதனால் அந்த நடிகையிடம் இருந்த மொத்த சொத்துக்களையும் விற்க ஆரம்பித்தார். ஆனால் கோவாவில் ஆடம்பரமான பங்களாவை வாங்குவதற்கு இன்னும் பணம் தேவைப்பட்டது. அதனால் அந்த நடிகை எடுத்த முடிவுதான் பெரும்புள்ளிகள் ஆக இருக்கும் அரசியல்வாதிகள், விஐபிகள் மற்றும் சினிமா பிரபலங்கள் ஆகியோரை வளைத்துக் கொண்டார்.

சும்மாவே அட்ஜஸ்ட்மெண்டுக்காக ஏங்கி இருக்கும் இவர்களுக்கு அந்த நடிகை தானாகவே போய் வலையை விரிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு அந்த நடிகை ஆசைப்பட்டபடி பணமழை கொட்டோ கொட்டென்று கொட்ட ஆரம்பித்தது. பிறகு கோவாவில் ஆடம்பர பங்களாவை வாங்கிவிட்டு தற்போதும் பெரும்புள்ளிகள் உடன் லூட்டி அடித்து வருகிறார்.