சினிமா செய்திகள்

பெங்களூர் தக்காளிக்கு இயக்குனர் வீசிய வலை.. இருக்கும் இடம் தெரியாமல் போன நடிகை

By Vijay · 04 பிப் 2025 · Updated 07 மார்ச் 2026
gossip

Gossip: பெங்களூர் தக்காளி போல் கும்முன்னு இருந்த நடிகை முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களுடன் நடித்தார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகளும் வரிசை கட்டியது.

ஆனால் நடிகையின் கெட்ட நேரமோ என்னமோ தெரியவில்லை மூன்றெழுத்து இயக்குனரின் பார்வையில் விழுந்தார். ஆரம்பத்தில் இருந்த நட்பு போக போக நெருக்கமானது.

இயக்குனரும் நடிகையை தன் தேவைகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார். நடிகை சம்பாதித்த சொத்துக்களையும் ஆட்டையை போட்டு இருக்கிறார்.

ஆரம்பத்தில் இயக்குனரை நம்பி மொத்தத்தையும் இழந்த நடிகை பின்பு சுதாரித்து இருக்கிறார். ஆனால் அதற்கான நேரம் எப்போதோ கடந்துவிட்டது.

இருக்கும் இடம் தெரியாமல் போன நடிகை

சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற கதையாக இயக்குனர் நடிகையை கை கழுவி விட்டு குடும்பம் குட்டி என செட்டில் ஆனார். பாவம் நடிகையோ வாய்ப்பு கிடைக்காமல் பரிதவித்துப் போனார்.

தற்போது ஜீவனத்திற்கு கூட வழியில்லாத நடிகை இயக்குனரிடம் உதவி கேட்டிருக்கிறார் ஆனால் அவரோ நடிகையை அவமானப்படுத்தி துரத்தி விட்டு விட்டாராம்.