சினிமா செய்திகள்

எம்ஜிஆர் கருணாநிதி சந்தித்த ஒரே மேடை.. 60 வருடத்திற்கு முன்பு நடந்த சம்பவத்தின் சாட்சி

எம்ஜிஆர், கருணாநிதி இருவரும் ஒரே மேடையில் சந்தித்த மறக்க முடியாத நிகழ்வின் சம்பவம் சாட்சி உடன் வெளிப்பட்டுள்ளது.

By Arun · 09 ஜூன் 2023 · Updated 09 மே 2025
karunanidhi-mgr

MGR – Karunanidhi: அரசியலிலும் சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்திய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போலவே, அதிக தமிழ் பழமை வாய்ந்த கலைஞர் மு. கருணாநிதியும் அரசியல் களத்தில் கீரியும் பாம்புமாய் இருந்தார்கள். இவர்களை ஒரே மேடையில் பார்ப்பது அபூர்வம்.

தமிழகத்தில் எம்ஜிஆர் முதலமைச்சராக கெத்துக்காட்டிக் கொண்டிருந்த சமயத்தில், கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராக களமாடினார். அந்த சமயத்தில் கட்சி மேடைகளில் இவர்கள் ஒருவர் மற்றவரை தாங்கி பேசிக்கொள்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.

அதன் தொடர்ச்சியாக தான் எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜெயலலிதா கருணாநிதிக்கு இடையே பனிப்போரே நிலவியது. இருப்பினும் ஜெயலலிதாவை விட எம்ஜிஆர் உடன் கருணாநிதி சரிக்கு சரியாக நின்று வாதிடுவார். இப்படி அரசியலில் கீரையும் பாம்புமாக இருக்கும் எம்ஜிஆரும், கருணாநிதியும் சந்தித்த நிகழ்ச்சி புதுக்கோட்டை பழனியப்பா திரையரங்கில் நடந்துள்ளது.

1960 இல் புதுக்கோட்டை பழனியப்பா திரையரங்கின் மேடையில் இருவரும் ஒன்றாக சேர்ந்து கலந்து கொண்டனர். இதில் கலந்துகொண்டு பழனியப்பா செட்டியார் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த புகைப்படம் பண்ணையப்பா செட்டியார் மகன் வழி பேரனிடம் புகைப்படம் வீட்டில் மாட்டி வைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் கருணாநிதியும் சந்தித்த நிகழ்ச்சி, இதுவாக மட்டுமே இருக்கும். இதை முக்கிய சரித்திர நாளாகவும் இது பார்க்கப்படுகிறது.

60 வருடத்திற்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வு வரலாற்றில் நடந்திருக்கும் மறக்க முடியாத நிகழ்வு என்பதால், அந்த புகைப்படத்தை திரை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் சென்று பார்த்து வருகிறார்கள். பண்ணையப்பா செட்டியார் மகன் வழி பேரன் அந்த புகைப்படத்தை மீடியாவில் கூட வெளிவிடாமல் பொக்கிஷமாக பார்த்து பராமரித்து வருகிறார்.