நக்கலிலும், நையாண்டியிலும் பிச்சு உதறும் 5 நடிகர்கள்.. சத்யராஜுக்குகே சொல்லி கொடுத்த குரு இவர்தான்

சில நடிகர்கள் நகைச்சுவை வாயிலாக பகுத்தறிவை புகட்டி உள்ளனர். மேலும் அவர்கள் சரளமாக பேசும்போதே நக்கலும், நையாண்டியும் சேர்ந்தே இருக்கும். சிலரது ஊர்களில் இதுபோன்று பாஷை புழக்கத்தில் உள்ளது. அவ்வாறு தமிழ் சினிமாவில் 5 நடிகர்கள் நக்கல், நையாண்டியில் பிச்சு உதறி உள்ளனர்.

கவுண்டமணி : நக்கல், நையாண்டி என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது கவுண்டமணி தான். அவரது படங்களில் உடனே கவுண்டர் கொடுத்து ரசிகர்களை சிரிக்க வைத்திடுவார். மேலும் இவர் செந்திலுடன் இணைந்து நிறைய படங்களில் காமெடியில் கலக்கி உள்ளார்.

மணிவண்ணன் : கோயமுத்தூர் என்றாலே குசும்பு என்பார்கள். அவ்வாறு கோவை மாவட்டத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான் மணிவண்ணன். ஆரம்பத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக மணிவண்ணன் பணியாற்றி இருந்தார். மேலும் இவரது பெரும்பாலான படங்களில் நக்கலும், நையாண்டியும் இடம் பெற்று இருக்கும்.

சத்யராஜ் : சத்யராஜுக்கு நக்கலும், நையாண்டியையும் சொல்லிக் கொடுத்தது அவரது குரு மணிவண்ணன் தான். சத்யராஜின் பல படங்களை மணிவண்ணன் இயக்கியிருந்தார். அப்போது மணிவண்ணன் சொல்லிக் கொடுத்த பாஷையை அப்படியே பிடித்துக் கொண்டு தற்போது வரை பயன்படுத்தி வருகிறார் சத்யராஜ்.

பார்த்திபன் : யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு வித்யாசமாக யோசிக்க கூடியவர் நடிகர் பார்த்திபன். இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டார். இவர் சாதாரணமாக மேடைப்பேச்சுகளிலேயே நக்கல், நையாண்டியாக பேசக்கூடியவர்.

சந்தானம் : ஒரு காலகட்டத்தில் வெளியாகும் அனைத்து படங்களிலுமே நகைச்சுவை நடிகராக சந்தானம் நடித்து வந்தார். அதற்குக் காரணம் அசால்டாக அடுத்தடுத்து கவுண்டர் கொடுப்பார். இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்தது. ஆனால் தற்போது ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.