பல காரணங்களால் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளிவந்த பின்னும் சூர்யாவால் கைவிடப்பட்ட 4 படங்கள் உள்ளது. பாலா-சூர்யா கூட்டணியில் நந்தா, பிதாமகன் போன்ற ஹிட் படங்களை கொடுத்து கடைசியாக வணங்கான் படத்தில் இணைய முடியாமல் போய்விட்டது.
இதில் சூர்யாவிற்கு பதிலாக அருண் விஜய் நடித்து படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சூரரைப் போற்றுக்குப் கூட்டணியுடன் சூர்யா மீண்டும் இணைய இருந்தது. ஆனால் புறநானூறு படம் கால்ஷீட் பிரச்சனையால் கைவிடப்பட்டது. இதை தற்போது பராசக்தி என்று டைட்டில் வைத்து சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் பல முக்கிய பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
லோகேஷ் முதல் முறையாக சூர்யாவை வைத்து இயக்க வேண்டும் என ஆசைப்பட்ட படம் இரும்பு கை மாயாவி, ஆனால் அதுவும் நடக்கவில்லை. தற்போது இதே கதையில் பாலிவுட் சூப்பர் ஹீரோ அமீர்கான், நடிக்க உள்ளார் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடைசியாக வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவும் டிராப் செய்யப்பட்டுள்ளது. வாடிவாசல் படத்தில் அதிக கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால் இரண்டு,மூன்று வருடங்கள் ஆகும் என்பதால் சூர்யா இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்துவிட்டாராம்.
தற்போது வெற்றிமாறன் சிம்புவை வைத்து வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு முழு முயற்சியில் இறங்கிவிட்டார். இதனால் வாடிவாசல் கூட்டணியும் சேர்வதற்கான வாய்ப்பே இல்லையாம். இதில் என்ன ஒரு சுவாரஸ்யம் என்றால் சூர்யா வேண்டாம் என்று கைவிட்டு வெளிவந்த 2 படங்கள் வெற்றி பெறவில்லை.
இதனால் சூர்யாவின் முடிவு சரிதான் என்கிறது கோலிவுட் வட்டாரம். இரும்புக்கை மாயாவி, வாடிவாசல் வேற ஹீரோவை வைத்து எடுத்தால் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி கூட்டணியில் வேட்டை கருப்பு இந்த படத்தில் நடித்து விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.