கோலிவுட்டை மட்டுமல்ல பாலிவுட்டையும் 80 மற்றும் 90களில் ஒரு கலக்கு கலக்கிய நடிகை ஒருவர், ஒன்றல்ல நிறைய பேருடன் கிசு கிசுக்கப்பட்டார். அதுவும் திருமணம் ஆன பிறகும் ஒரு நடிகருடன் தொடர்பில் இருந்தது தெரிந்ததும் அவருடைய கணவர் பிச்சுக்கிட்டு போய்விட்டார்.
காரணம் இவருக்கு ஒரு நடிகருடன் மட்டுமல்ல ஏகப்பட்ட பிரபலங்களுடனும் தொடர்பு இருந்திருக்கிறது. இந்த விஷயத்தை கேட்டதும் தாங்க முடியாமல் அவருடைய கணவர் விவாகரத்து பெற்று தலைமுழுகினார். கணவரை கழட்டி விட்ட பின்பு அந்த நடிகையின் ஆட்டம் கொஞ்சம் ஓவராகவே போனது.
அதன் பின் டாப் நடிகருடன் தொடர்ந்து ஜோடி போட்ட அந்த நடிகை அவரையே இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அப்பவும் அந்த நடிகையின் சேட்டை அடங்கவில்லை. இந்த நடிகரையும் கழட்டிவிட்டு, அடுத்ததாக ஒரு தொழிலதிபரை காதலித்தார்.
அவர்களுக்குள் என்ன பிரச்சனை நடந்ததோ தெரியல, அந்த தொழிலதிபர் திடீரென்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின்பு மறுபடியும் அந்த நடிகை பெரிய அரசியல் புள்ளியுடன் தொழிலதிபருமான ஒருவருடன் உறவில் இருந்தார்.
அதன் பின்பு அந்த நடிகையின் படுக்கையறைக்குள் நுழையக்கூடிய ஒரே நபர் அந்த பெரிய புள்ளிதான் இருக்கும். அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் மூன்று சகாப்தங்களுக்கு மேலாக ஒன்றாக பின்னிப் பிணைந்து இருந்தனர்.