பெரும்பாலான ரசிகர்கள் இப்போது தியேட்டரில் படம் பார்ப்பதை தவிர்த்து வருகிறார்கள். ஏனென்றால் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாகி விடுகிறது. ஆகையால் பெரிதாக செலவு இல்லாமல் குடும்பத்துடன் வீட்டிலேயே பார்த்துவிடலாம் என்ற எண்ணம் வருகிறது.
மேலும் தியேட்டருக்கு சென்றால் ஒரு நபருக்கு 200 ரூபாய் டிக்கெட் விலை இருக்கிறது. இதுதவிர பாப்கார்ன், ஸ்னாக்ஸ் என அது ஒரு தொகை வந்துவிடுகிறது. ஒரு குடும்பத்துடன் தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 2000 தேவைப்படுகிறது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என பல வருடங்களாகவே கோரிக்கை வைத்து வந்தனர். இதனால் திரைத்துறையின் வளர்ச்சி குறைந்து வருவதாகவும் கூறினர்.
இனி தியேட்டர்லயே படம் பார்க்கலாம்
இப்போது தமிழக அரசு இந்த வரியை குறைத்திருக்கிறது. அதாவது தமிழ்நாட்டு திரையரங்குகளில் உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் வரியை 8% இருந்து 4% குறைத்து இருக்கிறது. இதனால் நடிகர் சங்கம் தனது நன்றியை தெரிவித்திருக்கிறது.
இதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைந்திருக்கிறார்கள். ஆனால் டிக்கெட் விலை குறைவு ஏற்படுவதால் ரசிகர்கள் அதிகம் திரையரங்குகளில் வர வாய்ப்பு இருக்கிறது. என்னதான் ஓடிடியில் படம் பார்த்தாலும் தியேட்டரில் படம் பார்ப்பது போல் ஆகாது.
அதுவும் குறிப்பாக முதல் நாளில் முதல் ஷோ பார்ப்பது மிகவும் த்ரில்லர் தான். இப்போது மாநில அரசின் இந்த வரிக்குறைப்பால் தியேட்டர் ஓனர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.