தளபதியை தொட்டா நீ கெட்ட.. வேல்முருகன் மீது பாய்ந்த போக்சோ?

கடந்த சில வருடங்களாக பத்து மற்றும் 12-ம் வகுப்பில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக தளபதி விஜய் பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தி வருகிறார். இந்த வருடத்திற்கான நிகழ்ச்சி பாண்டிச்சேரியில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரின் முன்னிலையில் தளபதி பரிசுகளை வழங்கினார்.

இதனை பார்த்து பொறுக்க முடியாத தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சியில் இருக்கும் தெனாவட்டில் பெண் குழந்தைகளை ஆபாசமாக பேசிய வேல்முருகனின் வீடியோ பெரும் கண்டனத்துக்கு உள்ளானது.

எப்போதுமே திமுக கட்சி நேரடியாக களத்தில் இறங்காது, கூட்டணி கட்சிகளை வைத்து எதிர்க்கட்சிகளை டார்கெட் செய்யும் அதே போல தான் தற்போது வேல்முருகனை வைத்து விளையாடி உள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவர் பேசியதற்கு மன்னிப்பு கூட கேட்காமல் மறுநாள் விளக்கம் கொடுத்து பேட்டி அளித்தது இன்னும் பேரெதிர்ச்சி.

இதனால் TVK சார்பில் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது, அந்த புகாரை தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கையில் எடுத்துள்ளது. இதனால் வேல்முருகன் கைது கூட செய்யப்படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இப்படி குழந்தைகளையும் பெற்றோர்களையும் அசிங்கப்படுத்தி பேசுவது ஒரு கட்சித் தலைவர் செய்யக்கூடிய வேலையா? என்று மக்கள் தங்களது ஆதங்கத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர். எது எப்படியோ கடைசியில் விஜய் மீது வீசப்பட்ட கத்தி திரும்ப வேல் முருகனுக்குகே வந்துவிட்டது.

தவெக அடுத்தடுத்து இதுபோன்ற பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து தனக்கான பலத்தை நிரூபித்து வருகிறது. உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் எதிர்க்கட்சி முக்கிய புள்ளிகள் தவெக-வில் இணைந்து வரும் சூழ்நிலையில் பிரபலமான ஹீரோ ஒருவரும் விரைவில் இணைய உள்ளார்.