Ashmitha : சமீபகாலமாக சமூக வலைதளங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் யூடியூப் சேனல் ஆரம்பித்து விடுகின்றனர். குடும்பத்தில் நடப்பது நான்கு சுவருக்குள் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
ஆனால் இப்போது வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும் வெளிச்சத்திற்கு போட்டு காட்டும் அளவுக்கு உள்ளது. அப்படி தான் சினிமாவில் அறிமுகமாகி அதன் பின்பு இப்போது மேக்கப் ஆர்டிஸ்ட்டாக வளம் வந்து கொண்டிருக்கிறார் அஸ்மிதா. இவர் instagram பிரபலமான விஷ்ணுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் விவாகரத்து பெறுவதாக முடிவு எடுத்து விவாகரத்து பெற்ற பின் மீண்டும் இணைந்தனர். குறிப்பாக முதலில் இரண்டு குழந்தைகள் இருந்த நிலை சமீபத்தில் அஸ்மிதாவுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.
அஸ்மிதா மற்றும் விஷ்ணுவின் மோதல்
இந்த சூழலில் விஷ்ணு பிரபல ஊடகத்தில் தனது மனைவி அஸ்மிதா பற்றி திடுக்கிடும் தகவல்களை சொல்லியிருந்தார். அதாவது தனக்கு விவ்யூஸ் வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையுமே கண்டென்ட்டாக மாற்றுவார்.
மேலும் தொடர்ந்து அவர் வேற மாதிரியான தொழில் நடத்துகிறார் என்றெல்லாம் கூறி கேட்ட வார்த்தையில் பேசி இருந்தார். இதை அடுத்து அதே ஊடகத்திற்கு அஸ்மிதாவும் பேட்டி கொடுத்திருக்கிறார். அதாவது இத்தனை நாள் காதலித்து திருமணம் செய்து கொண்டோமே என்று விஷ்ணுவின் செயல்களை பொறுத்துக் கொண்டதாக கூறியிருக்கிறார்.
மேலும் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் போது காரில் தன்னை அடித்து துன்புறுத்தியதாக அந்த வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். அதோடு போலீஸ் முன்னிலையில் கெட்ட வார்த்தை சொல்லி அசிங்கமாக பேசி இருக்கிறார்.
தன்னை மானபங்கப்படுத்தியதற்காக இப்போது விஷ்ணு மீது அஸ்மிதா புகார் கொடுத்திருக்கிறார். இதை தொடர்ந்து விஷ்ணு கைது செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் யூடியூப்யில் இப்படி அன்னோனியமாக இருக்கும் பலர் நிஜ வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்படுகின்றனர்.