சமீப கால இளம் நடிகைகள் பலரும் திருமணத்திற்கு முன்பே தன் காதலர்களுடன் இணைந்து குழந்தை பெற்றுக்கொள்வதை ஃபேஷன் ஆக்கிவிட்டனர். அந்த வகையில் 36 வயது நடிகையும் இணைந்து விட்டார்.
பாலிவுட்டில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தான் ஃப்ரீடா பின்டோ(freida pinto). ஹாலிவுட் படங்களில் மட்டுமல்லாமல் ஹாலிவுட் தொலைக்காட்சி செய்திகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவருக்கும் புகைப்படக் கலைஞர் ஒருவருக்கும் 2019ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பிறகு திருமணம் செய்வதற்கான நாட்கள் தள்ளி கொண்டே சென்றதால் குழந்தை பெறும் வேலையில் இறங்கி விட்டார்கள் போல.
கல்யாண புகைப்படங்களை வெளியிடுவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றும் வகையில் கர்ப்பமான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார் நடிகை ஃப்ரீடா பின்டோ.

இந்திய வம்சாவளியான இவர் தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகி விட்டார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஹாலிவுட் சென்றுவிட்டாலே இந்த கலாச்சாரம் சகஜம் தான் என அங்குள்ள பிரபலங்கள் அவர்களை வாழ்த்தி வருகின்றனர்.
தற்போது இந்தியாவில் ஏன் தமிழ் சினிமாவிலேயே நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருவது சகஜமாகிவிட்டதுதானே.