நடனத்தில் கொடி கட்டி பறந்த அக்கடதேச நடிகர்.. விஜய்யால் முடியாததை 80ஸ்களிலே செய்து காட்டிய ஹீரோ

Actor Vijay: முன்னணி நடிகராய் தமிழ் சினிமாவில் வலம் வரும் விஜய்யால் முடியாத ஒன்றை 80ஸ் நடிகர் ஒருவர் சாதித்து காட்டியதை பிரபலமாக பேசப்பட்டு வருகிறார்கள். அதுவும் அக்கட தேசத்தில் பட்டைய கிளப்பும் இவரின் நடனம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

விஜய்யின் நடிப்பில் வெளிவரும் படங்களை கொண்டாடி தீர்க்கும் தமிழ் ரசிகர்கள் பலர் இருக்கும் நிலையில், இவருக்கு அக்கட தேசங்களிலும் ரசிகர்கள் உண்டு. இருப்பினும் இவரால் முடியாத ஒன்றை சாதித்துக் காட்டிய தெலுங்கு தேச நடிகர் தான் சிரஞ்சீவி.

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை ஆரம்ப காலகட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நடிகர்கள் மட்டுமே நடித்து வந்தார்கள். அந்த நிலையில் அவர்களை எதிர்த்து சாதித்து காட்ட வேண்டும் என்று எண்ணத்தில் சென்னையில் படிப்பை தொடர்ந்து அதன் பின் தெலுங்கு சினிமாவை தன் பக்கம் திரும்ப செய்தவர் தான் சிரஞ்சீவி.

ரஜினிகாந்த், விஜயகாந்த் கால கட்டத்தில் இவரும் கூத்துப்பட்டறையில் படித்தார். அவ்வாறு தான் மேற்கொண்ட முயற்சியின் வாயிலாக தனக்கான வாய்ப்பினை தெலுங்கில் சினிமாவில் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலகட்டத்தில் பொதுவாக தெலுங்கு சினிமா நடிகர்களுக்கு டான்ஸ் ஆட தெரியாது என்ற ஒரு கருத்து உண்டு. அவற்றை முறியடிக்கும் விதமாய் மைக்கேல் ஜாக்சன் நடனத்தை தெலுங்கு ரசிகர்கள் இடையே ஆடி தன் பக்கம் இழுத்தவர் சிரஞ்சீவி. அவ்வாறு விஜய் காண ரசிகர்கள் அக்கட தேசத்தில் இருந்தும் அவரை தெலுங்கு படத்தில் நடிக்க விட மாட்டார்கள்.

அதற்கு காரணமாக பார்க்கையில் எங்கு இவர் தெலுங்கில் வளர்ந்து விடுவார்களோ என்ற ஒரு பயத்தில் விஜய்யை நிராகரித்து வருகின்றனர். ஆனாலும் இவற்றை 80ஸ் காலகட்டத்திலேயே முறியடித்த பெருமையை பெற்றார் சிரஞ்சீவி என்பது குறிப்பிடத்தக்கது.