8 வருடத்திற்கு பின்பு வடிவேலு மீண்டும் தற்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக நடித்து வருகிறார். ஆனால் பழைய வடிவேலுவை இன்னும் யாரும் பார்க்க முடியவில்லை. அந்த அளவுக்கு மாறிவிட்டார். இவருடைய குணநலன்கள் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை. அப்படி இவர் டாப் ஹீரோக்களிடம் திமிரு காட்டியதால் இப்போதும் அவருடன் இணைந்து நடிக்க முடியாது என 4 நடிகர்கள் தூக்கி எறிந்து விட்டனர்.
நன்றாக வளர்ந்த நேரத்தில் அஜித்துடன் ராஜா படத்தில் நடிக்கும் பொழுது அஜித்தை மரியாதை குறைவாக பேசி, அதை மாற்றிக் கொள்ள முடியாததால் இன்று முதல் அஜித் வடிவேலுவை தூக்கி எறிந்து விட்டார். அவருடன் மட்டும் நடிக்கவே மாட்டேன் என உறுதியுடன் இருக்கிறார்.
அடுத்து தனுஷ் படிக்காதவன் படத்தில் வடிவேலு நடிக்கும் பொழுது தனுஷை மரியாதை குறைவாக பேசியதால் அந்த படத்தில் இருந்து தனுஷ் வலுக்கட்டாயமாக தூக்கி எறியப்பட்டார்பின்னர் விவேக் சேர்க்கப்பட்டு, அந்த படம் வெற்றியும் பெற்றது.
அதேமாதிரி சுந்தர் சி இயக்கிய ரெண்டு படத்தில் மாதவனுடன் நடிக்கும் பொழுது இதேபோல் உடன் நடிக்கும் நடிகர்களை மரியாதை குறைவாக நடத்தியதால் ஒரு பாதியில் வடிவேலு இன்னொரு பாதியில் சந்தானத்தை சேர்த்து படத்தை முடித்தார் இயக்குனர். அதேபோல் தற்பொழுது 8 வருடம் கழித்து நடிக்க வந்த பிறகும் சந்திரமுகி 2 படத்தில் கமிட்டானார்.
அதில் பி வாசு இடம் பிரச்சனை செய்து, இதனால் கோபப்பட்டு வடிவேலுவின் காட்சிகளை குறைத்து வடிவேலுவையே வெளியே போக சொன்னார் பி வாசு. இதேபோல் இவரது திமிரு தனம் தொடர்கதை ஆகிறது. படமும் ஓடவில்லை.அப்படியும் இவரது திமிரு மட்டும் குறையவில்லை. ஆனால் இப்படியே தொடர்ந்தால் தமிழ் சினிமாவில் இருக்கிற இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவார் என பிரபலங்கள் கூறி வருகின்றன.
ஏற்கனவே இவர் அதிகமாக திமிர் காட்டியதால் தற்பொழுது ஒழுங்காக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மாறவே இல்லை. சந்திரமுகி 2 படத்தில் பி வாசுவிடம் மல்லுக்கட்டி படத்தில் வடிவேலு காட்சிகளை குறைத்து வடிவேலுவை வெளியே அனுப்பி விட்டார்.