பிரச்சனை இருக்கு என்று தெரிந்தாலே எஸ்கேப் ஆகும் ஏகே.. சர்ச்சை நபர்களை அண்டாத அஜித்

அஜித் நேரமோ என்னமோ தெரியவில்லை துணிவு படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கொடுத்த இவரால் அடுத்த படத்திற்கு போக முடியாமல் ஆரம்பித்ததில் இருந்து சிக்கலுக்கு மேல் சிக்கலாக வந்து படம் இழுத்து அடித்துக் கொண்டே இருக்கிறது. பொதுவாகவே இவருடைய கேரக்டர் எந்த பிரச்சனையிலும் சிக்காமல் இருப்பதே இவருக்கு பிடிக்கும்.

அத்துடன் இந்த நபர் கூட சேர்ந்தால் பிரச்சனை வரும் அதனால் நமக்கு பெரிய துன்பம் என்று தெரிந்தாலே அவரை விட்டு ஒதுங்கி விடக் கூடியவர். அதை இத்தனை வருட காலமாக கடைப்பிடித்து வந்து இருக்கிறார். ஆனால் தற்போது இவருக்கு பிரச்சனை இல்லை என்றாலும் இவர் கூட்டணி வைக்கும் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பாளருக்கு அமலாக்கத் துறையிடமிருந்து பிரச்சனை வந்துள்ளது.

அங்கு வேலை செய்யும் முக்கிய நபர்களை டார்ச்சர் செய்து ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தை பற்றி பல தகவல்களை லைக்காவிடமிருந்து அமலாக்கத்துறை கரந்துள்ளது. இதனால் லைக்கா நிறுவனத்திற்கும் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்திற்கும் இருந்த நட்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது.

இதனால் அஜித்துக்கு என்ன பிரச்சனை என்றால் இவர்களால் இவருடைய பெயரும் கொஞ்சம் டேமேஜ் ஆகி கொண்டு வருகிறது. அதாவது எந்த விதத்தில் என்றால் இவருடைய படத்தின் டைட்டிலை வெளியிட்ட பிறகு இன்னும் வரை விடாமுயற்சி படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமல் இருக்கிறது.

அதனால் ஒவ்வொருவரும் அவங்க இஷ்டத்துக்கு கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுகின்றனர். இதனால் மொத்தமாக இதிலிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம் என்ற முடிவில் பெரிய யோசனையில் இருக்கிறார். அதனால் உடனடியாக ஒரு அதிரடி முடிவை எடுத்தாக வேண்டும் என்ற நிர்பந்தனையில் இருக்கிறார்.

இவருடைய அடுத்த படத்தை லைக்காவிடம் தொடர்ந்து ஒப்படைக்கலாமா இல்லை வேண்டாமா என்று ரெண்டும் கட்ட மனசில் இருக்கிறார். இதனால் கூடிய சீக்கிரமே ஒரு முடிவை எடுத்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால் மறுபடியும் ஆரம்பித்ததிலிருந்து ஒவ்வொன்றுக்கும் பிள்ளையார் சொல்லி போட வேண்டும்.