அங்காடி தெரு நடிகை திடீர் மரணம்.. இப்படி எல்லாம் ஒரு சாவு வரக்கூடாது

Angadi theru Actress: இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் அங்காடித்தெரு. இப்படம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற படமாக தற்போது வரை நிலைத்திருக்கிறது. இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களையும் எப்பொழுது மறுபடியும் திரையில் பார்ப்போம் என்று நினைக்கும் வகையில் ஒவ்வொருவரும் நடிப்பை எதார்த்தமாக கொடுத்திருப்பார்கள்.

அந்த வகையில் அங்காடித்தெரு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பரிச்சயமானவர் குணச்சித்திர நடிகை சிந்து.  இவர் வெள்ளித்திரையிலும், பல சீரியலிலும் நடித்து வந்தார். மேலும் இவர் நடிப்பையும் தாண்டி கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்திருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் உணவின்றி தவித்து கஷ்டப்படுபவர்களுக்கு பல்வேறு உதவிகளை இவரால் முடிந்தவரை செய்து வந்தார். அப்படிப்பட்ட இவர் மார்பக புற்றுநோயால் பல பிரச்சினைகளை உடல் அளவில் சந்தித்து மிகவும் அவதிப்பட்டு இருக்கிறார். இதனால் சில வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலமாக மார்பகங்கள் அகற்றப்பட்டன.

அதன் பிறகு இவர் எடுத்துக்கொண்ட சிகிச்சை உடலளவில் இவருக்கு செட்டாகததால் அதிகமான கஷ்டத்தை அனுபவித்து வந்தார். பல பேட்டிகளில் பேசிய இவர், என்னால் இந்த அவஸ்தை எல்லாம் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இறைவா என்னை சீக்கிரத்தில் அழைத்துக் கொள்ளுங்கள் அல்லது நிம்மதியாக வாழ விடுங்கள் என்று கண்ணீர் மல்க பேசி இருந்தார்.

மேலும் எப்படியாவது இந்த கஷ்டத்திலிருந்து மீள வேண்டும் என்பதற்காக நாட்டு மருத்துவம் இங்கிலீஷ் மருத்துவம் என எத்தனையோ வைத்தியங்களை பார்த்துள்ளார். ஆனால் அதிலிருந்து மீள முடியாததால் இன்று அதிகாலை 2.15 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள இவருடைய வீட்டிலேயே உயிரிழந்து விட்டார்.

இவரது உடல் அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து இறுதிச் சடங்கு விருகம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நடைபெற இருக்கிறது. இவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.