Atlee : இயக்குனர் அட்லீ தொடர்ந்து வெற்றி படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார். பாலிவுட்டில் ஷாருக்கான் வைத்து அவர் இயக்கிய ஜவான் படம் ஆயிரம் கோடி தாண்டி வசூல் செய்தது. இப்போது பிரம்மாண்ட பட்ஜெட்டில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ அடுத்த படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தில் அல்லு அர்ஜுன், தீபிகா படுகோன் மற்றும் பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த சூழலில் அட்லீக்கு சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அட்லீ சிலவற்றை பேசுகிறார்.
தன்னுடைய வெற்றிக்கு காரணம் மனைவி பிரியா என்று கூறியிருந்தார். அதோடு அட்லீத் படங்களில் எப்போதுமே காப்பி சர்ச்சை வருவதுண்டு. மற்ற படங்களின் சாயல் அல்லது காட்சிகளை காப்பி அடித்ததால் அட்லீ படம் எடுத்து வருவதாக குற்றச்சாட்டு இழந்து வந்தது.
காப்பி சர்ச்சை குறித்து அட்லீயின் பேச்சு
என்னதான் இப்படி விமர்சனங்கள் வந்தாலும் அவரது படங்கள் பெரிய வரவேற்பை பெற்ற வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படி இருக்கையில் அந்த விழாவில் பேசிய அட்லீ, பொதுவாக நான் செய்யும் படங்களை அங்கிருந்து எடுத்தேன் இங்கிருந்து எடுத்தேன் என்ற சொல்வார்கள்.
நான் உண்மையை சொல்கிறேன், என் வாழ்க்கையில் நான் பார்த்த விஷயங்களை தான் படமாக எடுத்தேன். நான் காப்பி அடிக்கவில்லை என்று அட்லீ கூறியிருந்தார். இதற்கும் சேர்த்து இப்போது அட்லீயை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
அதாவது டிவி மற்றும் தியேட்டரில் பார்த்ததை தான் தனது படங்களில் எடுத்திருக்கிறார். தன்னுடைய கற்பனை திறனால் படத்தை எடுக்கவில்லை என்பதை அவரே ஒற்றுக் கொண்டு விட்டார். காப்பி அடிப்பதற்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா என அட்லீயை வச்சு செய்து வருகிறார்கள்.