நடிகையை பதம் பார்ப்பதற்கு விடாமல் துரத்திய வாரிசு நடிகர்.. பழசை நோண்டி நொங்கெடுக்கும் பயில்வான்

Bailwan Ranganathan: சினிமா விமர்சகர் பயில்வான் நடிகர் மற்றும் நடிகைகளின் அந்தரங்க விஷயங்களை தனது யூடியூப் வாயிலாக கூறி வருகிறார். இதற்கு சினிமா பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அந்த காலம் முதல் தற்போது வரை இருக்கும் சினிமா பிரபலங்கள் அனைவரையும் பயில்வான் விடுவதில்லை.

அவர் எப்பேர்ப்பட்ட ஆளாக இருந்தாலும் அவர்களைப் பற்றி நோண்டி நுங்கெடுத்து விஷயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். இதை அறிய ரசிகர்களும் ஆர்வமாக இருப்பதால் அவரது யூடியூப் சேனலில் நிறைய பேர் பின் தொடர்கிறார்கள். இதன் காரணமாக பயில்வான் கல்லா கட்டி வருகிறார்.

அந்த வகையில் வாரிசு நடிகர் ஒருவரை பற்றி பயில்வான் பல விஷயங்களை அவிழ்த்து விட்டு உள்ளார். அவரது அப்பாவும் சினிமாவில் இருந்தாலும் மிகவும் கண்ணியமாக இருக்கக்கூடியவர். ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் மற்ற நடிகைகளை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டார்.

ஆனால் அதற்கு அப்படியே நேர் எதிராக இருப்பவர்தான் கார்த்திக் என வெளிப்படையாக பேசி இருக்கிறார் பயில்வான். அதாவது பழம்பெரும் நடிகரான முத்துராமன் பிராமின பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்குப் பிறந்த மகனான கார்த்திக் அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

தன்னுடைய முதல் படத்தில் ஜோடியாக நடித்த ராதா உடனே கார்த்திக் கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு அவரது படத்தில் நடிக்கும் பல நடிகைகளுடன் கார்த்திக் உறவிலிருந்து இருந்ததாக கூறியிருக்கிறார். அதுவும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பதம் பார்க்காமல் கார்த்திக் விடமாட்டாராம்.

அப்படிப்பட்ட முத்துராமனுக்கு இப்பேற்பட்ட மகனா என கோலிவுட் சினிமாவே அப்போது இவரை மோசமாக பேசினார். மேலும் அப்போதே அப்பா பெயரை கார்த்திக் குழி தோண்டி புதைத்து விட்டார் என கடுமையாக சாடி இருந்தார் பயில்வான். இதைக் கேட்ட கார்த்திக் ரசிகர்கள் பயில்வானை திட்டி தீர்த்து வருகிறார்கள்.