கை கொடுத்த லைக்காவை காலை வாரிய விஷால்.. கல்யாணத்துக்கு முன்பே கோர்ட் கொடுத்த விருந்து

விஷால் இப்பொழுதுதான் வாழ்க்கையில் அடுத்த படியை எடுத்து வைத்து தன்னுடைய திருமணச் செய்தியை அறிவித்திருந்தார். ஆகஸ்ட் மாதம் நடிகை சாய் தன்சிகாவை திருமணம் செய்யப் போவதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்திருந்தார்.

15 வருடங்களாக நட்பாய் பழகி வந்த இவர்கள் இப்பொழுது திருமணச் செய்தியை அறிவித்து விட்டனர். இப்படி நல்ல நேரம் கூடி வருகையில் லைக்கா,விஷாலுக்கு எதிராக தொடர்ந்து வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது. விஷால் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விஷால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்திற்காக மதுரை பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடி 29 லட்சம் கடனாக பெற்று இருந்தார். அந்த கடனை திருப்பித் தருவதாக லைக்கா உத்திரவாதம் கொடுத்து விஷாலின் கால் சீட் பெற்றுக் கொண்டது. ஆனால் அவர்களுக்கு தொடர்ந்து விஷால் படம் நடித்து கொடுக்கவில்லை.

இதனால் வழக்கு தொடர்ந்த லைக்கா நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. விஷால் அந்த நிறுவனத்திற்கு வட்டியுடன் கடனை திருப்பி கொடுக்க வேண்டும். அப்படி செலுத்த தவறினால் வழக்கு முடியும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை தியேட்டர்கள் அல்லது ஓடிடியில் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதனால் விஷாலின் சொத்து ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி உத்தரவு போட்டது. அதன்படி அவர் தன்னிடம் மூன்று கார்கள், ஒரு பைக் ,மற்றும் 2 வங்கி கணக்குகள் இருப்பதாக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். இப்பொழுது லைக்காவிற்கு விஷால் 30% வட்டியுடன் கடனை திருப்பித் கொடுக்க வேண்டும் என கோர்ட் உத்தரவு போட்டு உள்ளது.