கடன், அறுவை சிகிச்சை, சினிமாவுக்கு எண்டு கார்டு போடும் ஹீரோ.. விஜய் சகோதரருக்கு வந்த சங்கடம்

2005 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இன்று ஹீரோ கதாபாத்திரம் தவிர வேறு எதுவும் பண்ணுவதில்லை. எஸ்ஐ சந்திரசேகர் படத்தில் தான் இவர் முதல் முதலாக இசையமைத்தார். தன்னுடைய மகன் விஜய் போல், அந்த இசையமைப்பாளரை வளர்த்து வந்தார் சந்திரசேகர்.

அதன்பின் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தார். பார்ப்பதற்கு ஹீரோ போல் இருப்பதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவும் செய்தார். 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இவர் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இதனால் இசையமைப்பதை நிறுத்திவிட்டு தொடர்ந்து ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

நான் மற்றும் சலீம் என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினாள் விஜய் ஆண்டனி. நமக்கு நடிப்பு நன்றாக வருகிறது என அதிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். 2015 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் சூப்பர் ஹிட் ஆனது.

பிச்சைக்காரன் படத்துக்குப் பின்னர் 15 படங்கள் நடித்த போதிலும் ஒன்று கூட அவருக்கு கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் படங்கள் இயக்குவதிலும் ஆர்வம் காட்டினார். அண்ணாதுரை, பிச்சைக்காரன் 2, திமிரு பிடித்தவன், கோடியில் ஒருவன் போன்ற படங்களை இயக்கியும் தோல்வி கண்டார்.

பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை இவர் தயாரிக்கவும் செய்தார். அந்த படம் சூட்டிங் நேரத்தில் இவருக்கு பெரிய விபத்து ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட அவருக்கு படங்களும் கை கொடுக்கவில்லை. இதனால் சினிமாவை விட்டு விலகும் முடிவுக்கு வந்துள்ளார் விஜய் ஆண்டனி.