சினிமாவுக்காக நேந்து விட்ட ஆள் நா கிடையாது.. சிம்புவை குத்தி காட்டுகிறாரா தனுஷ்.?

Simbu:-Dhanush: கடந்த சில நாட்களாகவே தனுஷ் குபேரா இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு தான் வைரலாகி வருகிறது. நாளை இப்படம் திரையரங்குகளை அலங்கரிக்க வருகிறது.

அந்த ப்ரோமோஷன் ஒரு பக்கம் நடந்து வருகிறது. மற்றொரு பக்கம் தனுஷ் பேச்சை அவருடைய ரசிகர்கள் ரசிப்பது மட்டும் இன்றி ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் மற்ற ரசிகர்கள் அதிலும் ஒரு குற்றம் கண்டுபிடித்து ட்வீட் போட்டு வருகின்றனர். அப்படித்தான் அவர் சிம்புவை குத்தி காட்டி பேசி இருக்கிறார் என ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

சிம்புவை குத்தி காட்டுகிறாரா தனுஷ்.?

குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் நான் சினிமாவுக்காக நேந்து விட்ட ஆள் கிடையாது. நடிப்பு, டான்ஸ், ஃபைட் இப்படி எதுக்காகவும் கிளாஸ் போய் கத்துக்கல.

நான் நடிக்கணும்னு ஆசைப்பட்டு வரல. ஆனா ஒரு நாள் எங்க அப்பா கேமரா முன்னாடி கொண்டு வந்தாரு. எங்க அண்ணன் நடிப்பு சொல்லிக் கொடுத்து ஸ்டார் ஆக்குனாரு என குறிப்பிட்டிருந்தார்.

இந்த குறிப்பிட்ட பகுதியை மட்டும் ரசிகர்கள் கட் செய்து தனுஷ் சிம்புவை தான் நேரடியாக அட்டாக் செய்திருக்கிறார் என பரப்பி வருகின்றனர். இதற்கு சிம்பு ரசிகர்கள் தகுந்த பதிலடியும் கொடுத்து வருகின்றனர்.

நாளை படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த அக்கப்போர் இன்னும் முடியவில்லை. ஏற்கனவே தக் லைஃப் படம் வந்தபோது தனுஷ் ரசிகர்கள் சிம்புவை கலாய்த்து ட்வீட் போட்டிருந்தனர்.

அப்போது அவர்கள் குபேரா வரட்டும் என பதிலடி கொடுத்தார்கள். இதனால் நாளை சோசியல் மீடியா பற்றி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.