Dhanush : நடிகர் தனுஷ் அவர்கள் ஆடுகளம் படத்தில் இருந்து ஒவ்வொரு படமாக தன்னை மெருகேற்றிக் கொண்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் வரவேற்பை பெற்றவர். தனுஷ் அவர்களை “நடிப்பின் அரக்கன்” என்றே கூறலாம். தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார் தனுஷ்.
தற்போது வெளிவந்திருக்கும் குபேரா படம் 100 கோடி வசூலை தாண்டி சென்று கொண்டிருப்பதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தனுஷ் அவர்களின் நடிப்பை பாராட்டியும் கொண்டிருக்கிறோம் ஆனால் இந்த 100 கோடி வசூல் என்பது இந்த படத்திற்கு மட்டுமல்ல பின்னோக்கி சென்று பார்த்தால் 2022-லிருந்து இந்த 100 கோடி வசூல் ஆரம்பித்துள்ளது.
தனுஷின் 100 கோடி வசூல் வெற்றிப்பயணம்..
ஆமாம் 2022 ஆம் ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படம், இதில் தனுஷ் மற்றும் நித்யா மேனன் முதலில் பிரண்ட்ஷிப்பில் மிரட்டி இருப்பார்கள். இரண்டாம் பாகத்தில் காதல் கதையிலும் மிரட்டி இருப்பார்கள். இரண்டு கோணங்களை கொண்ட பணம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது மற்றும் நித்யா மேனன் அவர்களின் நடிப்பும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். இந்த படம் 104 கோடி வசூலை பெற்று தந்தது.
அடுத்ததாக 2023 ஆம் ஆண்டு வெளிவந்த வாத்தி படமும் பெரிய அளவில் தனுஷ் அவர்களுக்கு கை கொடுத்தது, இது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் தனுஷ் அவர்களின் நடிப்புத் திறமையை வெளிக் கொண்டு வந்தது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளிவந்த இந்த படமும் 106 கோடி வசூல் பெற்று தந்தது.
இதற்கடுத்து 2024 ஆம் ஆண்டு வெளிவந்த ராயன் படம் பல முக்கிய கதாபாத்திரங்களை முன்வைத்தது. இந்த படம் அண்ணன், தம்பி மற்றும் தங்கை ஆகியோரின் கதைகளை மையப்படுத்தி வெளிவந்தது. அசால்டான நடிப்பில் அசத்தி இருப்பார் நம் தனுஷ். தனுஷ் அவர்களுக்கு எதார்த்தமான நடிப்பு ராயன் படத்தில் மிகவும் கை கொடுத்தது. இந்த படமும் தனுஷ் அவர்களுக்கு 150 கோடியை தாண்டி வசூலை பெற்று தந்தது.
தற்போது 2025 ம் ஆண்டு வெளியாகி இருக்கும் குபேரா படமும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இதுவும் வெளிவந்து சில நாட்களிலேயே 100 கோடி வசூலை எட்டியுள்ளது. இந்த அனைத்து படங்களிலுமே தன் நடிப்பின் மூலம் மட்டுமே 100 கோடி வசூலையும் ஈட்டி உள்ளார் தனுஷ் என்பது மிக முக்கியமான ஒன்று. அதனால் “ஒன் மேன் ஷோ தனுஷ்” என்றே கூறலாம்.